Dailyhunt
அரசு கஜானாவை ஏடிஎம் ஆக பயன்படுத்தும் திமுக... பணம் எங்க போச்சு முதல்வரே..? பியூஷ் கோயல் சரமாரி கேள்வி..!!

அரசு கஜானாவை ஏடிஎம் ஆக பயன்படுத்தும் திமுக... பணம் எங்க போச்சு முதல்வரே..? பியூஷ் கோயல் சரமாரி கேள்வி..!!

Tamilwire 1 week ago

த்திய அமைச்சர் பியூஷ் கோயல் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தமிழக அரசின் வருவாய் அதிகரிக்க ஜிஎஸ்டியும் ஒரு காரணம் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

12 லட்சம் கோடி ரூபாய் முதலீடு கிடைத்துள்ளது என்கிறது திமுக அரசு என்றும் அந்த முதலீடுகள் எங்கே எனவும் கேள்வி எழுப்பினார். அரசு ஊழியர்களின் பல பணப்பலன்களை முதல்வர் குடும்பம் அபகரித்ததாக குற்றம் சாட்டினார்.

ஊழல் செய்யும் திமுக அரசு எந்த விதத்திலும் மீண்டும் ஆட்சிக்கு வந்து விடக்கூடாது என்றார். அரசு ஊழியர்கள் பணப்பலன் மட்டுமின்றி மது விற்பனை, அரசு ஒப்பந்த பணிகள் என அனைத்திலும் கமிஷன் அடிக்கிறது திமுக என்று தெரிவித்தார். வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் கேட்டு உள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், பணம் எங்கே போச்சு முதல்வரே என்ற கேள்வி எழுப்பினார்.

தமிழ்நாட்டின் கடன் 10 லட்சம் கோடியை தாண்டி உள்ளதாகவும் கடன் சுமை அதிகரித்துக் கொண்டே செல்வதால் வெள்ளை அறிக்கை என்றும் தெரிவித்தார். தமிழ்நாட்டு மக்கள் நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு முதல்வரிடம் பதில் இல்லை என்றும் பொய்யான பரப்புரைகளை முதல்வர் மேற்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

அரசின் கஜானாவை முதல்வரின் குடும்பம் எட்டியமாக பயன்படுத்தி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாடு திருவள்ளுவர் வாழ்ந்த மண் என்றும் காமராஜர் வாழ்ந்த மண் என்றும், ஆனால் தமிழ்நாட்டின் முதல்வரின் குடும்பம் ஏடிஎம் ஆக மாற்றி உள்ளது எனவும் தெரிவித்தார். தமிழ்நாட்டிலேயே நாட்டிலேயே மிகவும் பொறுப்பற்ற மாநில அரசு என்றால் அது தமிழ்நாடு மாநில அரசுதான் என்று தெரிவித்துள்ளார். திமுக தலைமையிலான அரசு பொறுப்பில்லாத அரசாக இருக்கிறது என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தமிழக அரசின் வருவாய் அதிகரிக்க ஜிஎஸ்டியும் ஒரு காரணம் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். 12 லட்சம் கோடி ரூபாய் முதலீடு கிடைத்துள்ளது என்கிறது திமுக அரசு என்றும் அந்த முதலீடுகள் எங்கே எனவும் கேள்வி எழுப்பினார். அரசு ஊழியர்களின் பல பணப்பலன்களை முதல்வர் குடும்பம் அபகரித்ததாக குற்றம் சாட்டினார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamilwire