Dailyhunt
#BREAKING: தவெக ஆட்சி அமைக்க உரிமை கோரிய விஜய்..! ஆளுநருடன் சந்திப்பு..!

#BREAKING: தவெக ஆட்சி அமைக்க உரிமை கோரிய விஜய்..! ஆளுநருடன் சந்திப்பு..!

Tamilwire 1 week ago

மிழக சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், கட்சித் தலைவர் விஜய் தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை இன்று சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார்.

தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர், தவெக தலைவர் விஜய் ஆளுநருக்கு மின்னஞ்சல் மூலம் கடிதம் ஒன்றை அனுப்பினார். அந்தக் கடிதத்தில் தன் கட்சி 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாகவும், தனிப்பெரும் கட்சியாக இருப்பதால் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க வேண்டும் என்றும், பெரும்பான்மையை நிரூபிக்க இரு வார கால அவகாசம் வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

மேலும், தேவைப்பட்டால் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுக் கடிதங்களைச் சமர்ப்பிக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். இதற்கிடையில் காங்கிரஸ் கட்சி தங்களது முழு ஆதரவை தமிழக வெற்றி கழகத்திற்கு தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழக வெற்றி கழகத்தின் ஆதரவை எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 113 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் ஆளுநரை சந்திக்க விஜய் நேரம் கேட்டிருந்த சூழலில், இன்று ஆளுநரை சந்திப்பதற்காக சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகைக்கு சென்றார் விஜய். அங்கு, பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து ஆட்சியமைப்பதற்கு உரிமை கோரினார். ஆட்சி அமைப்பதற்கு உரிமை கேட்டு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கடிதத்தை வழங்கினார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், கட்சித் தலைவர் விஜய் தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை இன்று சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamilwire