Dailyhunt
#BREAKING: தேர்தல் திருவிழா. எதிர்க்கட்சித் தலைவர் EPS வேட்பு மனுத்தாக்கல்..!!

#BREAKING: தேர்தல் திருவிழா. எதிர்க்கட்சித் தலைவர் EPS வேட்பு மனுத்தாக்கல்..!!

Tamilwire 1 week ago

மிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 ஏப்ரல் 23 அன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில், வேட்பு மனு தாக்கல் மார்ச் 30 அன்று தொடங்கியது.

இன்று ஏப்ரல் 6 ஆம் தேதி கடைசி நாளாக அமைந்துள்ளது. இந்தச் சூழலில் அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிச்சாமி தனது சொந்த தொகுதியான எடப்பாடியில் இன்று வேட்பு மனுவைத் தாக்கல் செய்து உள்ளார்.

அதிமுக தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இணைந்து செயல்படும் முடிவை எடுத்துள்ளது. பாஜக, பாமக, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் இருக்கையைப் பங்கிட்டுக்கொண்டு, அதிமுக தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இந்தப் பட்டியல்களில் பல முன்னாள் அமைச்சர்கள், சிட்டிங் எம்எல்ஏக்கள் மீண்டும் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

எடப்பாடி பழனிச்சாமி தனது சொந்த தொகுதியான எடப்பாடியில் இருந்து மீண்டும் போட்டியிடுகிறார். எடப்பாடியில் ஐந்து முறை வெற்றி பெற்ற எம்எல்ஏவான எடப்பாடி பழனிச்சாமி இந்த முறையும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார். 1996, 2006 ஆகிய காலகட்டத்தில் தோல்வியை தழுவியிருந்த எடப்பாடி பழனிச்சாமி எடப்பாடி தொகுதியில் போட்டியிடுவது எட்டாவது முறை. இந்த நிலையில், இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

தேர்தல் நடத்தும் அதிகாரி நடராஜனிடம் தனது வேட்பு மனுவை எடப்பாடி பழனிச்சாமி கொடுத்துள்ளார். முன்னதாக, தான் போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் தேர்தல் அலுவலகத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 ஏப்ரல் 23 அன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில், வேட்பு மனு தாக்கல் மார்ச் 30 அன்று தொடங்கியது. இன்று ஏப்ரல் 6 ஆம் தேதி கடைசி நாளாக அமைந்துள்ளது. இந்தச் சூழலில் அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிச்சாமி தனது சொந்த தொகுதியான எடப்பாடியில் இன்று வேட்பு மனுவைத் தாக்கல் செய்து உள்ளார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamilwire