Dailyhunt
உதய் அண்ணாவை பார்க்கக்கூட முடியலையே! புலம்பும் நிர்வாகிகள்! ஐவரணி ஆட்டம்! மு.க.ஸ்டாலினிடம் பறந்த புகார்!

உதய் அண்ணாவை பார்க்கக்கூட முடியலையே! புலம்பும் நிர்வாகிகள்! ஐவரணி ஆட்டம்! மு.க.ஸ்டாலினிடம் பறந்த புகார்!

Tamilwire 2 weeks ago

மீபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் பணிகளில் தி.மு.க. இளைஞரணியின் செயல்பாடு குறித்து கட்சிக்குள் கடும் அதிருப்தி எழுந்துள்ளது.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை சுற்றியுள்ள 'ஐவரணி' என அழைக்கப்படும் குழுவினர் மீது, கட்சி வேட்பாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேரடியாக புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தல் பணிகளில் சரிவர ஈடுபடாதவர்கள் மீது புகார் தெரிவிக்க விடாமல் தடுத்ததாகவும், தங்களுக்கு வேண்டியவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் மட்டுமே உதயநிதியை பிரசாரம் செய்ய வைத்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. வேட்பாளர் பட்டியல் தயாரானபோது இளைஞரணிக்கு 40 தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று உதயநிதி கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், இளைஞரணியில் வெறும் 20 பேருக்கே வாய்ப்பு அளிக்கப்பட்டது.

த.வெ.க.வுக்கு இளைஞர்கள் மற்றும் முதல் முறை வாக்காளர்களின் ஓட்டுகள் பெருமளவில் செல்வதைத் தடுக்கும் வகையில், தி.மு.க. இளைஞரணியில் 5 லட்சம் நிர்வாகிகளை நியமித்து தேர்தல் பணியில் ஈடுபடுத்தியிருந்தது. ஆனால் ஓட்டுப்பதிவின்போது இளைஞர்கள் பெரும் அளவில் த.வெ.க.வுக்கு வாக்களித்தது தெரியவந்தது. இதற்கு இளைஞரணி நிர்வாகிகள் தேர்தல் பணிகளை சரிவர செய்யவில்லை என்பதே முக்கிய காரணம் என்று கட்சியினர் கருதுகின்றனர்.

இது குறித்து உதயநிதியிடம் நேரடியாக புகார் அளிக்க முயன்றபோது, அவரைச் சுற்றியுள்ள 'ஐவரணி' அதற்கு அனுமதி அளிக்காமல் தடுத்துவிட்டதாக மாவட்டச் செயலர்களும் வேட்பாளர்களும் ஸ்டாலினிடம் தெரிவித்துள்ளனர்.

சில தி.மு.க. நிர்வாகிகள் கூறுகையில், 'உதயநிதி தனது உதவியாளர்கள், உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் என ஐந்து பேரின் பிடியில் இருக்கிறார். அவர்களின் வழிகாட்டுதலின்படியே அவர் கட்சிப் பணிகளை மேற்கொள்கிறார். நிர்வாகிகளும் தொண்டர்களும் அவரை நெருங்கவிடாமல் இரும்புத்திரை போட்டு தடுக்கும் பணியை அந்த ஐவரும் சிறப்பாக செய்து வருகின்றனர்' என்றனர்.

திண்டிவனம், மயிலம் உள்ளிட்ட தொகுதிகளுக்கு கூட்டணிக் கட்சிகளுக்கு அனுப்பப்பட்ட தேர்தல் செலவு பணத்தை ஒரு முன்னாள் அமைச்சர் சுருட்டிய விவகாரத்தை உதயநிதியின் கவனத்துக்குக் கொண்டு செல்ல முடியவில்லை என்றும், சில வேட்பாளர்கள் உதயநிதியை தங்கள் தொகுதிக்கு அழைத்தபோது, 'ஐவரணி'யில் உள்ள ஒருவரின் பரிந்துரையின் அடிப்படையிலேயே அவர் பிரசாரம் செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால் பல வேட்பாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

த.வெ.க.வுக்கு இளைஞர் ஆதரவு அதிகரித்து வரும் நிலையில், இளைஞரணியை உதயநிதி நேரடியாகக் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்று கட்சியினர் வலியுறுத்துகின்றனர். இல்லையெனில் இளைஞரணியின் வளர்ச்சியில் தேக்கம் ஏற்படும் என்ற அச்சமும் நிலவுகிறது.

இந்த விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு, உதயநிதியை சுற்றியுள்ள 'ஐவரணி'யின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தப் புகார்கள் தி.மு.க.வுக்குள் புதிய உள் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் பணிகளில் தி.மு.க. இளைஞரணியின் செயல்பாடு குறித்து கட்சிக்குள் கடும் அதிருப்தி எழுந்துள்ளது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை சுற்றியுள்ள 'ஐவரணி' என அழைக்கப்படும் குழுவினர் மீது, கட்சி வேட்பாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேரடியாக புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamilwire