Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
எது சாப்பிட்டாலும் வாந்தியா..!! பாட்டி வைத்தியம்..!!

எது சாப்பிட்டாலும் வாந்தியா..!! பாட்டி வைத்தியம்..!!

Tamil Yugam News 1 week ago

ரொம்ப நாளா எது சாப்பிட்டாலும் வாந்தியா வருது பாட்டி.. அது மட்டுமில்லாம எந்த நேரமும் மலம் கழிக்கணும்னே தோணுது..

ஜீரணமே ஆக மாட்டேங்குது.. என்ன பண்றதுன்னே தெரியலை.. சரியா தூக்கமும் வர்றதில்ல.. பசியும் எடுக்கிறதில்ல.. என்ன பண்றதுண்ணே தெரியலை பாட்டி.. இதுக்கு நீதான் ஏதாச்சும் மருந்து சொல்லனும்… என மீனாட்சி தனது பிரச்சனையை பாட்டியிடம் கூறினாள்.

உடனே பாட்டி, உனக்கு 40 வயசு ஆச்சுல்ல.. ஒடம்பு ஏதாவது ஒரு வகையில பாதிப்பு இருக்கத்தானே செய்யும்.

… குடல் கொத்துக் கெட்டா உடல் ஒண்ணுக்கும் ஆகாதுண்ணு சொல்றதுண்டு.. குடல் செரிமான சக்திய இழந்துட்டா எது சாப்பிட்டாலும் இப்பிடித்தான்.. ஒண்ணு வாந்தி வரும், இல்லன்னா வயிற்றுப்போக்கு வரும். எப்போதுமே மந்தமா இருக்கும்.. பசி.. தூக்கம் ரெண்டுமே தானா குறையும்.. அதுனாலதான் வயித்த சுத்தமா வச்சிக்கணும்னு சொல்றது..

சரி.. இப்ப நான் சொல்ற மருந்த கேட்டுக்க..

சுக்கு - 1 துண்டு

மிளகு - 5

திப்பிலி - 2

நெல்பொறி - 2 ஸ்பூன்

நறுக்குமூலம் - 2 துண்டு

வெற்றிலை - 1

எடுத்து எல்லாத்தையும் ஒண்ணா சேத்து இடிச்சி கசாயம் செஞ்சி காலை மாலை சாப்பாட்டுக்கு முன்னால குடிச்சிக்கிட்டு வா.. இந்த வயித்துக் குமட்டல் எல்லாம் காணாம போயிடும்.

பாட்டி சொன்ன மருந்தைக் கேட்டு மனதில் புதுத் தெம்பு பெற்றவளாக அங்கிருந்து விடைபெற்றாள் மீனாட்சி.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamil Yugam