Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
அறங்காவலர் மாநிலக்குழு உறுப்பினராக பாடகர் த. வேல்முருகன் நியமனம்

அறங்காவலர் மாநிலக்குழு உறுப்பினராக பாடகர் த. வேல்முருகன் நியமனம்

Tamilscreen 1 week ago

மிழ்நாடு அரசின் அறநிலையத்துறையால் பராமரிக்கப்படும் திருக்கோயில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களை நியமனம் செய்திட தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களை தெரிவு செய்து உரிய பெயர்ப்பட்டியலை தயாரித்து வழங்கும் குழுவின் உறுப்பினராக பிரபல பாடகர் த.

வேல்முருகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், இந்து அறநிலையத்துறை அமைச்சர் எஸ். ரமேஷ், இந்து அறநிலையத்துறை ஆணையர் ஜெ. குமரகுருபரன் உள்ளிட்டோருக்கு வேல்முருகன் நன்றி தெரிவித்துள்ளார்.

'அன்பில் அவன்' படத்தின் 'ஆசை வரமே' ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது

இது குறித்து மேலும் பேசிய அவர்,

"இதை ஒரு பதவியாக நினைக்காமல் பொறுப்பாக நினைத்து பணியாற்றுவேன். இறைவனுக்கு பணி செய்ய இந்த வாய்ப்பு கிடைத்தது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.

ஒரு பாமரனாக திருக்கோயில்களில் பாடி வரும் எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்ததற்கு உண்மையிலேயே இறைவனுக்கும், அரசுக்கும், முதல்வருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். எல்லாம் வல்ல முருகன் அருளால் எப்பொழுதும் எல்லாருக்கும் நல்லதே நடக்க வேண்டும்," என்றார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamilscreen