Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஐயோ பாவம். வெள்ளத்தில் தவித்த நாய்க்குட்டியைக். காப்பாற்ற முயன்ற சிறுவன் பரிதாப பலி. நெஞ்சை உலுக்கும் சோகம்.!

ஐயோ பாவம். வெள்ளத்தில் தவித்த நாய்க்குட்டியைக். காப்பாற்ற முயன்ற சிறுவன் பரிதாப பலி. நெஞ்சை உலுக்கும் சோகம்.!

Tamizhan media 2 weeks ago

சாம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாகப் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றன. தலைநகர் கவுகாத்தி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வீடுகளுக்குள்ளும் வீதிகளிலும் வெள்ள நீர் புகுந்து, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர் மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுப் போக்குவரத்துச் சேவைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், வெள்ளத்தில் சிக்கித் தவித்த ஒரு நாய்க்குட்டியைக் காப்பாற்ற முயன்ற சிறுவன் ஒருவன், எதிர்பாராதவிதமாக வேகமாகக் பாய்ந்து வந்த வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டான். அந்த நாய்க்குட்டியைக் கரையேற்றப் போராடிய சிறுவனை, சீறிப்பாய்ந்த நீர்ச்சருக்கு சில நொடிகளில் இழுத்துச் சென்றது காண்போரைக் கண் கலங்க வைத்தது.

தகவலறிந்து விரைந்து வந்த மீட்புப் படையினரும் உள்ளூர் மக்களும் சிறுவனைத் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், இறுதியில் அவன் சடலமாகவே மீட்கப்பட்டான். ஒரு சிறு உயிரைக் காப்பாற்றத் தன் உயிரைப் பணயம் வைத்துச் சிறுவன் பலியான இந்தச் சம்பவம், அசாம் மக்கள் மத்தியிலும் சமூக வலைதளங்களிலும் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media