Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஐயோ கொடுமையே. பார்சிக் ஓடையில் குளிக்கச் சென்ற. மும்ப்ரா இளைஞர்கள் 3 பேர். நீரில் மூழ்கி பரிதாப பலி. மகாராஷ்டிராவில் சோகம்.!

ஐயோ கொடுமையே. பார்சிக் ஓடையில் குளிக்கச் சென்ற. மும்ப்ரா இளைஞர்கள் 3 பேர். நீரில் மூழ்கி பரிதாப பலி. மகாராஷ்டிராவில் சோகம்.!

Tamizhan media 1 week ago

காராஷ்டிர மாநிலம் தானேவில் உள்ள கல்வா பகுதியில் உள்ள பார்சிக் முகத்துவாரத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று நீந்தச் சென்ற மும்ப்ராவைச் சேர்ந்த மூன்று பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

அப்பகுதியில் நீர்மட்டம் அதிகமாக இருந்ததால், ஆழம் தெரியாமல் இறங்கியதே இந்த விபத்திற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

தகவல் அறிந்ததும் உடனடியாக தீயணைப்புப் படையினரும், தானே பேரிடர் மீட்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர தேடுதலில் ஈடுபட்டனர். மீட்புப் படையினர் போராடி மூவரின் உடல்களையும் மீட்டு காவல்துறைவசம் ஒப்படைத்தனர்.

உயிரிழந்தவர்கள் அனைவரும் முப்ரா பகுதியைச் சேர்ந்த ஆலம் சையத், ரிஸ்வான் சையத் மற்றும் சாகில் போலண்டாஜ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காகக் கல்வாவில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media