Dailyhunt
அந்த கடவுளுக்கு கருணை இல்லையா..? சாலையோரம் காய்ச்சலில் துடிக்கும் குழந்தை. "மருந்து வாங்க கூட வழியில்லை" கண்ணீர் விடும் தந்தை. கண்ணீர் வரவழைக்கும் வீடியோ..!!

அந்த கடவுளுக்கு கருணை இல்லையா..? சாலையோரம் காய்ச்சலில் துடிக்கும் குழந்தை. "மருந்து வாங்க கூட வழியில்லை" கண்ணீர் விடும் தந்தை. கண்ணீர் வரவழைக்கும் வீடியோ..!!

Tamizhan media 5 days ago

“இறைவன் எதை வேண்டுமானாலும் கொடுக்கட்டும், ஆனால் ஒருவருக்குக் வறுமையை மட்டும் கொடுத்துவிடக் கூடாது” என்ற வரிகள் இதயத்தை கனக்கச் செய்கின்றன.

வறுமை என்பது ஒரு மனிதனை எவ்வளவு தூரம் நிலைகுலையச் செய்யும் என்பதற்கு வைரலாகும் இந்த சம்பவமே சாட்சி. சாலையில் தஞ்சம் புகுந்துள்ள நிலையில், தன் கண் முன்னே தன் உயிருக்கு உயிரான குழந்தை காய்ச்சலில் துடிப்பதைக் கண்டும், அதற்குத் தேவையான மருத்துவ உதவியோ அல்லது தலைசாய்க்க ஒரு பாதுகாப்பான இடமோ இல்லாமல் தவிக்கும் அந்தத் தந்தையின் நிலை சொல்லொணாத் துயரமானது.

தன்னால் தன் குழந்தைக்கு ஒருவேளை உணவோ அல்லது மருந்தொ கொடுப்பதற்கு வழியில்லாத போது, ஒரு மனிதன் அடையும் மனவேதனை மரணத்தை விடக் கொடியது. ஆதரவற்று நடுத்தெருவில் கிடக்கும் அந்தப் பிஞ்சுயிரின் துடிப்பும், அதற்கு உதவ முடியாமல் கையறு நிலையில் நிற்கும் பெற்றோரின் கண்ணீரும் சமூகத்தின் மனசாட்சியை உலுக்கக்கூடியவை. வறுமை என்பது வெறும் பணமில்லாத நிலை மட்டுமல்ல, அது ஒரு மனிதனின் தன்மானத்தையும் நம்பிக்கையையும் சிதைக்கும் மிகக் கொடுமையான ஒரு சூழலாகும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media