சீனாவில் தனது தந்தையின் செல்போனை அனுமதி இன்றி எடுத்து விளையாடிய சிறுமி ஒருவர், விளையாட்டுச் செயலிக்குள் (In-game purchases) தந்தையின் பணத்தைப் பயன்படுத்திப் பொருட்களை வாங்கியுள்ளார்.
இந்த விவரம் தந்தைக்குத் தெரியவந்ததையடுத்து, அந்தச் சிறுமி தனது தவறுக்காகப் பதற்றத்துடன் மன்னிப்பு கேட்டுள்ளார். ஆனால், அவரது தந்தை இந்தத் தவறை லேசாக விடாமல், சிறுமியைத் காவல் நிலையத்திற்குச் சென்று சரணடையுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
தன் தவறை உணர்ந்த அந்தச் சிறுமி, அழுதுகொண்டே காவல் நிலையத்திற்குச் சென்று அங்கிருந்த பெண் காவலரிடம் நடந்தவற்றைக் கூறித் தன்னைத் தண்டிக்குமாறு வேண்டியுள்ளார். தந்தையின் இந்த நூதனமான கண்டிப்பும், சிறுமி பயத்துடன் காவல்துறையிடம் சரணடைந்த வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் உலக அளவில் வைரலாகி வருகிறது. குழந்தைகளின் ஒழுக்கத்தை மேம்படுத்த அந்தத் தந்தை கையாண்ட இந்த அதிரடி முறை குறித்துப் பலரும் விவாதித்து வருகின்றனர்.

