தமிழகத்தில் இந்த ஆண்டு நடைபெற்ற 10-ஆம் வகுப்பு (SSLC) பொதுத்தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.
இத்தேர்வில் ஒட்டுமொத்தமாக 94.31% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். கடந்த ஆண்டு (2025) 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதம் 93.80% ஆக இருந்த நிலையில், இந்த ஆண்டு தேர்ச்சி விகிதமானது 0.51% அளவுக்கு உயர்ந்துள்ளது மாணவர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை மூலம் வெளியிடப்பட்டுள்ள இந்தத் தேர்வு முடிவுகளை, மாணவர்கள் தங்களின் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியைக் குறிப்பிட்டு, கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in ஆகியவற்றின் மூலம் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம். தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்குப் பல்வேறு தரப்பில் இருந்தும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

