தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய், புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 5-ஆம் தேதி ரோடு ஷோ மற்றும் 23 முக்கிய இடங்களில் பிரம்மாண்டமான தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த நிலையில், காவல்துறை அதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது கட்சி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு விஜய்யின் கோரிக்கையை நிராகரித்த காவல்துறை, ஒரு நாள் முன்னதாகவே அதாவது ஏப்ரல் 4-ஆம் தேதி மட்டும் பிரச்சாரம் செய்ய அனுமதி அளித்துள்ளதுடன், வில்லியனூர் சந்திப்பு உள்ளிட்ட நான்கு குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே பேச அனுமதி வழங்கியுள்ளது. குறிப்பாக, தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ரோடு ஷோ நடத்தவும் அனுமதி மறுக்கப்பட்டிருப்பதால், திட்டமிட்டபடி முழுமையான பிரச்சாரத்தை முன்னெடுக்க முடியாமல் விஜய் மற்றும் அவரது கட்சியினர் மிகுந்த அதிருப்தியில் இருப்பதாகத் தெரிகிறது.

