தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின் பின்னணியில் திமுக அடைந்த தோல்விக்குத் தார்மீகப் பொறுப்பேற்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.
தமிழக ஆளுநர் (பொறுப்பு) ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்கள் தற்போது கேரளா மாநிலத்திற்குப் பயணம் மேற்கொண்டுள்ளதால், அவரை நேரில் சந்திப்பதில் தாமதம் ஏற்படும் என்பதைக் கருத்தில் கொண்டு, முதல்வர் தனது அதிகாரப்பூர்வ ராஜினாமா கடிதத்தை கவர்னர் மாளிகைக்கு மின்னஞ்சல் (E-mail) வாயிலாக அனுப்பி வைத்தார்.
தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து முதல்வர் தனது பதவியை உடனடியாகத் துறந்திருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அடுத்தகட்ட அரசு அமைக்கும் பணிகள் குறித்து ஆளுநர் மாளிகை விரைவில் அறிவிப்புகளை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

