சளி, இருமல், செரிமானக் கோளாறு போன்ற அன்றாட உடல்நலப் பிரச்சினைகளுக்கு உடனடியாக மருந்துக்கடைகளுக்கும் மருத்துவமனைக்கும் ஓடுவதைத் தவிர்த்து, நம் வீட்டு சமையலறையில் உள்ள எளிமையான பொருட்களைக் கொண்டே அவற்றைச் சரிசெய்ய முடியும்.
லேசான இருமல் மற்றும் சளித்தொல்லைக்கு மருந்துகளுக்குப் பதிலாக, மிளகுத் தூளைத் தேனுடன் கலந்து, குறிப்பாக இரவில் தூங்குவதற்கு முன் சாப்பிடுவது நல்ல பலனைத் தரும். அதேபோல், சாப்பிட்ட பிறகு ஏற்படும் வாய்வுத் தொல்லை மற்றும் வயிறு உப்பசத்திற்குச் செயற்கை பானங்களைத் தவிர்த்து, அரை ஸ்பூன் சோம்பை வாயில் போட்டு மென்று சாப்பிடுவது ஜீரணத்தை மேம்படுத்தும்.
நெஞ்செரிச்சல் மற்றும் அசிடிட்டி போன்ற பிரச்சினைகளுக்குத் தண்ணீரில் ஊறவைத்த சப்ஜா விதைகளைக் குடிப்பது உடலுக்குக் குளிர்ச்சியைத் தந்து, பித்தத்தைத் தணிக்கும். லேசான வயிற்றுப் போக்கு ஏற்படும் போது, தயிருடன் வறுத்துப் பொடி செய்த வெந்தயத்தைக் கலந்து சாப்பிடுவது உடனடியாகப் போக்கை நிறுத்திச் செரிமானத்தை முறைப்படுத்தும். மேலும், உடல் வலி மற்றும் தலைவலிக்கு வலி நிவாரணி மாத்திரைகளை நாடாமல், வெதுவெதுப்பான பாலில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் ஜாதிக்காய் பொடி கலந்து குடித்தால் வலி குறைவதோடு, நரம்பு மண்டலம் அமைதியாகி இரவில் நல்ல தூக்கமும் வரும்.
https://www.instagram.com/reel/DTmkNcjiFMe/?utm_source=ig_web_button_share_sheet
இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள வீட்டு வைத்திய முறைகள் அனைத்தும் எளியப் பொருட்களைக் கொண்டு செய்யப்படுபவை மற்றும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே பகிரப்பட்டுள்ளன. இவை முறையான மருத்துவ சிகிச்சைக்கு மாற்றானவை அல்ல என்பதோடு, இதன் செயல்திறன் மற்றும் துல்லியத்தன்மைக்குச் சமயம் தமிழ் பொறுப்பாகாது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

