நம் வீட்டு கிச்சன் மற்றும் அறைகளில் எப்போதும் தொல்லை தரும் கரப்பான் பூச்சிகளை விரட்ட, நாம் பயன்படுத்தும் ரசாயன ஸ்பிரேக்கள் உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கலாம்.
இதற்கு இயற்கையான மற்றும் பாதுகாப்பான வழி, கரப்பான் பூச்சிகளுக்கு பிடிக்காத வாசனை கொண்ட செடிகளை வீட்டில் வளர்ப்பதுதான். முதலாவதாக, புதினா இலைகளில் இருக்கும் வலுவான மெந்தால் வாசனை பூச்சிகளுக்கு சுத்தமாக பிடிக்காது; இதனை சிங்க் அல்லது ஜன்னல் அருகில் வளர்க்கலாம். இரண்டாவதாக, மனிதர்களுக்கு மன அமைதியை தரும் லாவெண்டர் செடியில் உள்ள இயற்கை வேதிப்பொருள் பூச்சிகளை அண்டவிடாது. மூன்றாவதாக, கற்பூர நறுமணம் கொண்ட ரோஸ்மேரி செடியை சமையலறை ஜன்னல் பகுதியில் வளர்ப்பதன் மூலம் கரப்பான் பூச்சிகள் வசிப்பதைத் தடுத்து, சமையலுக்கும் புதிய இலைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
அடுத்ததாக, சாமந்தி பூக்களில் இயற்கையான பூச்சிக்கொல்லி மருந்து நிறைந்துள்ளது. கடைகளில் விற்கும் பல பூச்சி விரட்டிகளில் இந்த வேதிப்பொருள் தான் சேர்க்கப்படுகிறது என்பதால், இதை சமையலறை மூலைகளில் வைத்தால் பூச்சிகள் வரவே வராது. மேலும், உலர் உணவுகளை சேமிக்கும் இடத்திற்கு அருகில் பிரியாணி இலை செடியை வைக்கலாம்; இதில் கரப்பான் பூச்சிகளைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது. பூனைகளுக்கு மிகவும் பிடித்த கேட்னிப் செடியில் உள்ள இயற்கைச் சேர்மம், ஜெர்மன் கரப்பான் பூச்சிகளை கெமிக்கல் ஸ்பிரேக்களை விட மிகச் சிறப்பாக விரட்டும் என ஆய்வுகள் கூறுகின்றன.
ஏழாவதாக, எலுமிச்சை நறுமணம் கொண்ட லெமன்கிராஸ் செடியும் கரப்பான் பூச்சிகளுக்கு கடுமையான அலர்ஜியை ஏற்படுத்தி அவற்றை வீட்டை விட்டு ஓடச்செய்யும். இந்த இயற்கை செடிகளை சமையலறையில் சிறிய தொட்டிகளில் வளர்ப்பது மிகவும் எளிது மற்றும் இதற்கு அதிக பராமரிப்பும் தேவைப்படாது; தரமான சூரிய வெளிச்சம் இருந்தாலே இவை மிக எளிதாக வளர்ந்துவிடும். இத்தகைய தாவரங்களை வீட்டில் வளர்ப்பதன் மூலம் ரசாயனங்களின் ஆபத்து மற்றும் பக்கவிளைவுகள் இல்லாமல், கரப்பான் பூச்சிகளை எளிதாக விரட்டுவதோடு நம் வீடும் பசுமையாகவும் அழகாகவும் மாறும்.

