Dailyhunt
கேரவனுக்குள் அழைத்து. நடிகையிடம் அத்துமீறிய இயக்குநர். தொழிலாளர் சம்மேளனத்தில் இருந்து சஸ்பெண்ட்.!!

கேரவனுக்குள் அழைத்து. நடிகையிடம் அத்துமீறிய இயக்குநர். தொழிலாளர் சம்மேளனத்தில் இருந்து சஸ்பெண்ட்.!!

Tamizhan media 2 weeks ago

லையாளத் திரைப்பட இயக்குநர் ரஞ்சித் பாலகிருஷ்ணன் மீது நடிகை ஒருவர் சுமத்திய பாலியல் அத்துமீறல் புகார், கேரளத் திரைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

படப்பிடிப்பின் போது தன்னை 'கேரவனுக்குள்' அழைத்து ரஞ்சித் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக அந்த நடிகை அளித்த புகாரின் அடிப்படையில், கொச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இந்த வழக்கின் தொடர்ச்சியாக, அதிரடி நடவடிக்கை எடுத்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், பாலியல் புகாரில் சிக்கி சிறை சென்றுள்ள ரஞ்சித் பாலகிருஷ்ணன் மீது மலையாளத் திரைப்படத் துறையின் தொழிலாளர் சம்மேளனம் (FEFKA) தற்போது கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. அவர் அமைப்பின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கம் (Suspension) செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே அடுத்தடுத்த புகார்களால் ரஞ்சித்தின் திரைப் பயணம் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், இந்தச் சஸ்பெண்ட் நடவடிக்கை அவர் மீதான பிடியை மேலும் இறுக்கியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media