Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
மனித குலத்திற்கு மிகபெரிய எச்சரிக்கை.! நேபாள வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,050 ஆக உயர்வு. 4,000 பேரை காணவில்லை. வெளியான திடுக்கிடும் தகவல்கள்.!!

மனித குலத்திற்கு மிகபெரிய எச்சரிக்கை.! நேபாள வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,050 ஆக உயர்வு. 4,000 பேரை காணவில்லை. வெளியான திடுக்கிடும் தகவல்கள்.!!

Tamizhan media 1 week ago

நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு தரும் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,050 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் சுமார் 4,000 பேர் இன்னும் காணாமல் போயுள்ளதால், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

திபெத் எல்லைக்கு அருகில் ஏற்பட்ட பனிப்பாறை மற்றும் பாறை சரிவு காரணமாக போட்டேகோஷி ஆற்றில் திடீரெனப் பாய்ந்த பெருவெள்ளம், வடக்கு மற்றும் மத்திய நேபாளப் பகுதிகளில் உள்ள வீடுகள், பாலங்கள் மற்றும் நீர்மின் திட்டங்களைப் பெருமளவில் சேதப்படுத்தியுள்ளது. இதில் சித்வான் மாவட்டத்தில் மட்டும் அதிகபட்சமாக 321 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதுவரை சுமார் 12,000 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்துப் பேசிய நேபாள பிரதமர் பாலேந்திர ஷா, இமாலயப் பகுதியில் வெப்பநிலை 1.8 டிகிரி உயர்ந்துள்ளதே இத்தகைய திடீர் வெள்ளப் பேரழிவிற்குக் காரணம் என்றும், காலநிலை மாற்றம் மனிதகுலத்திற்கு விடுத்துள்ள மிகப்பெரிய எச்சரிக்கை இது என்றும் தெரிவித்துள்ளார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media