Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"நான் ராஜினாமா பண்றேன்..!" தமிமுன் அன்சாரி சொன்னதும்.. ஸ்டாலின் சொன்ன அந்த 'ஒரே' வார்த்தை. பரபரக்கும் அரசியல் களம்.!!

"நான் ராஜினாமா பண்றேன்..!" தமிமுன் அன்சாரி சொன்னதும்.. ஸ்டாலின் சொன்ன அந்த 'ஒரே' வார்த்தை. பரபரக்கும் அரசியல் களம்.!!

Tamizhan media 2 weeks ago

மிழகச் சட்டமன்றத் தேர்தலில் சென்னை மண்டலத்தில் விஜய் தலைமையிலான தவெக அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் 14-ஐக் கைப்பற்றி தவெக அசுர பலத்தை நிரூபித்துள்ளது. பெரம்பூரில் விஜய், வில்லிவாக்கத்தில் ஆதவ் அர்ஜுனா எனப் பல முக்கியப் புள்ளிகள் வெற்றி பெற்றுள்ள நிலையில், தமிழக அரசியலின் உற்றுநோக்கப்படும் தொகுதியான கொளத்தூரில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தவெக வேட்பாளர் வி.எஸ். பாபுவிடம் 9,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திமுக கூட்டணி படுதோல்வியைச் சந்தித்த நிலையிலும், சிதம்பரம் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி 5,747 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 25 ஆண்டுகளாக திமுக கூட்டணி வெல்ல முடியாமல் இருந்த தொகுதியை மீட்டெடுத்த கையோடு, அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். அப்போது, தோல்வியடைந்த ஸ்டாலின் மீண்டும் சட்டமன்றம் வரவேண்டும் என்பதற்காக, தனது சிதம்பரம் தொகுதி உறுப்பினர் பதவியையே ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாக உணர்ச்சிப்பூர்வமாகத் தெரிவித்தார்.

இருப்பினும், தமிமுன் அன்சாரியின் இந்த வேண்டுகோளை மறுத்த ஸ்டாலின், “அப்படியெல்லாம் பேசக்கூடாது” என அவரைத் தடுத்துள்ளார். “வெளியூர்க்காரர்”, “கோவில் நகரத்தில் எப்படி வெல்வார்?” எனத் தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களைத் தனது தேர்தல் வியூகத்தால் முறியடித்ததாகத் தெரிவித்த தமிமுன் அன்சாரி, தீட்சிதர்கள் முதல் கிராமப்புற மக்கள் வரை அனைவரும் தனக்கு ஆதரவளித்ததாகக் குறிப்பிட்டார். தற்போதைய அரசியல் சூழலில், ஆளுங்கட்சி கூட்டணியாக இருக்கும் வாய்ப்பை இழந்தாலும், ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக மக்கள் நலனுக்காகச் சமரசமின்றிச் செயல்படப்போவதாக அவர் உறுதிபடக் கூறினார்.

நாளை காலை 11.30 மணிக்கு விஜய் தமிழக முதல்வராகப் பதவியேற்க உள்ள நிலையில், திமுகவினர் பெரும் கலக்கத்தில் உள்ளனர். தவெக-வின் இந்த விஸ்வரூப வெற்றியால் சென்னை கோட்டைக்குள் ஒரு புதிய சகாப்தம் தொடங்குகிறது. அதேவேளையில், தனது வெற்றிக்காக உழைத்த அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உள்ளிட்ட திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினருக்கு நன்றி தெரிவித்த தமிமுன் அன்சாரி, தொகுதி மக்களின் குடிநீர் மற்றும் சாலை வசதிகளை நிறைவேற்றுவதே தனது முதல் பணி எனவும் பிரகடனப்படுத்தியுள்ளார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media