Dailyhunt
"நான் செஞ்சது தப்புதான்" மன்னிப்பு கடிதம் கொடுத்து. மீண்டும் பாஜகவில் இணைந்தார் ஏ.என்.எஸ். பிரசாத்..!!

"நான் செஞ்சது தப்புதான்" மன்னிப்பு கடிதம் கொடுத்து. மீண்டும் பாஜகவில் இணைந்தார் ஏ.என்.எஸ். பிரசாத்..!!

Tamizhan media 2 weeks ago

மிழக பாஜகவின் செய்தித் தொடர்பாளர் பொறுப்பில் இருந்த ஏ.என்.எஸ். பிரசாத், 'தமிழக வெற்றிக் கழகம்' தலைவர் விஜய்க்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இணையுமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

கட்சியின் முடிவுக்கு மாறாகச் செயல்பட்டதால், கடந்த மார்ச் மாதம் அவர் கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். தற்போது தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து, தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளர் நயினார் நாகேந்திரனிடம் மன்னிப்பு கடிதம் அளித்துள்ளார்.

பிரசாத்தின் மன்னிப்புக் கடிதத்தை ஏற்றுக்கொண்ட பாஜக தலைமை, அவரை மீண்டும் கட்சியில் இணைத்துக்கொண்டது. மேலும், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தீவிரமாகப் பணியாற்ற அவருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல் அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media