Dailyhunt
"நீங்கள் பாதுகாப்பான கரங்களில் உள்ளீர்கள்!". இந்தியாவுக்கு மட்டும் பச்சைக்கொடி. போர் மேகங்களுக்கு இடையே ஈரான் கொடுத்த மாஸ் மெசேஜ்.!!!

"நீங்கள் பாதுகாப்பான கரங்களில் உள்ளீர்கள்!". இந்தியாவுக்கு மட்டும் பச்சைக்கொடி. போர் மேகங்களுக்கு இடையே ஈரான் கொடுத்த மாஸ் மெசேஜ்.!!!

Tamizhan media 1 week ago

டந்த பிப்ரவரி 28-ம் தேதி இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரான் மீது தொடங்கிய தாக்குதலால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

போரின் முதல் நாளிலேயே ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனி கொல்லப்பட்ட போதிலும், ஈரான் சரணடையாமல் ஒரு மாதத்திற்கும் மேலாகத் தொடர்ந்து போரிட்டு வருகிறது. இந்த மோதலால் உலகெங்கும் பொருளாதார பாதிப்புகள் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளன, குறிப்பாக எரிசக்தி விநியோகத்தில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

உலகின் 20% எரிசக்தி சரக்குகள் கடந்து செல்லும் முக்கிய வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியுள்ளதே இந்த நெருக்கடிக்கு முக்கியக் காரணமாகும். இதனால் தெற்காசிய நாடுகளில் கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி (LPG) சப்ளை கடுமையாகப் பாதிக்கப்பட்டு, எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் கடைகள் அடைப்பு போன்ற சூழல் உருவாகியுள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அவற்றின் நட்பு நாடுகளின் கப்பல்களுக்கு ஈரான் தடை விதித்துள்ளதால் சர்வதேசக் கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ளது.

இந்த இக்கட்டான சூழலில், இந்தியா போன்ற நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்ல ஈரான் அனுமதி அளித்துள்ளது. இது குறித்து இந்தியாவிற்கான ஈரான் தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இந்திய நண்பர்களே, நீங்கள் பாதுகாப்பான கரங்களில் உள்ளீர்கள், கவலை வேண்டாம்” எனத் தெரிவித்து உறுதி அளித்துள்ளது. இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் கப்பல்கள் மட்டும் தடையின்றிச் செல்ல அனுமதிக்கப்படுவதாக ஈரான் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

இருப்பினும், போர்க்களச் சூழல் காரணமாக இந்தியக் கப்பல்கள் சில இன்னும் ஜலசந்தியில் சிக்கியுள்ளன. இதுவரை 8 இந்தியக் கப்பல்கள் பாதுகாப்பாக வெளியேறியுள்ள நிலையில், இந்தியாவுக்குத் தேவையான எல்பிஜி மற்றும் கச்சா எண்ணெய் ஏற்றி வந்த 19 கப்பல்கள் இன்னும் அங்கு தவித்து வருகின்றன. இந்த கப்பல்களைப் பாதுகாப்பாக தாயகம் அழைத்து வர மத்திய அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் விளைவாக இந்தியாவில் எரிசக்தி தட்டுப்பாட்டைப் போக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media