தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தொங்கு சட்டசபை (Hung Assembly) ஏற்பட்டுள்ள சூழலில், அதிமுக-வின் அடுத்தகட்ட நகர்வு குறித்து பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு அக்கட்சியின் மூத்த தலைவர்களான சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் நேரில் வருகை தந்துள்ளனர். தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைக்க அதிமுக தனது ஆதரவை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கவே இந்தச் சந்திப்பு நடைபெறுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, தவெக-விற்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக சி.வி. சண்முகம் தனது ஆதரவாளர்களுடன் விரிவான ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார். அந்த ஆலோசனையைத் தொடர்ந்து தற்போது எடப்பாடி பழனிசாமியை அவர் சந்திப்பதால், அதிமுக-வின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு விரைவில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. தமிழக அரசியலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், தவெக தலைமையிலான ஆட்சி அமைய அதிமுக முட்டுக்கொடுக்குமா என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இந்தச் சந்திப்பிற்குப் பிறகு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

