Dailyhunt
ஒரே நொடி.. பதற வைக்கும் விபத்து..! மின்னல் வேகத்தில் பிரேக் போட்ட கார் டிரைவர் - ஜாபுவாவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்.!

ஒரே நொடி.. பதற வைக்கும் விபத்து..! மின்னல் வேகத்தில் பிரேக் போட்ட கார் டிரைவர் - ஜாபுவாவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்.!

Tamizhan media 1 week ago

த்தியப் பிரதேச மாநிலம் ஜாபுவாவில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தின் போது, கார் ஓட்டுநரின் துரிதமான செயல்பாட்டால் இருவர் உயிர் தப்பிய நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சாலையில் வேகமாக வந்து கொண்டிருந்த பைக் ஒன்று நிலைதடுமாறி விழுந்ததில், அதில் பயணித்த இருவரும் கார் சக்கரங்களுக்கு மிக அருகில் தூக்கி வீசப்பட்டனர். அந்த இக்கட்டான நொடியில் காரை ஓட்டி வந்த நபர் காட்டிய சமயோசித அறிவு அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

எதிரே பைக் விழுந்ததைக் கண்ட அந்தப் பொறுப்புள்ள கார் ஓட்டுநர், ஒரு நொடி கூட தாமதிக்காமல் மிகச் சரியான நேரத்தில் பிரேக் போட்டு காரை நிறுத்தினார். கார் நின்ற இடத்திற்கும், கீழே விழுந்து கிடந்தவர்களுக்கும் இடையே சில அங்குல தூரம் மட்டுமே இடைவெளி இருந்தது. ஓட்டுநரின் இந்தத் துரித முடிவு, ஒரு மிகப்பெரிய விபத்தைத் தடுத்ததுடன், அந்த இருவரின் உயிரையும் மயிரிழையில் காப்பாற்றியது.

இந்தச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட நிலையில், அந்த கார் ஓட்டுநரை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். “சாலையில் கவனம் சிதறாமல் வாகனம் ஓட்டுவது எவ்வளவு முக்கியம் என்பதற்கு இதுவே சாட்சி” எனப் பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர். அதிவேகமாகச் செல்லாமல், கட்டுப்பாட்டுடன் காரைச் செலுத்தியதாலேயே அவரால் சரியான நேரத்தில் நிறுத்த முடிந்தது எனச் சாலை பாதுகாப்பு ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media