Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"சுடுகாட்டிற்குப் போவேனே தவிர மாற்றுக்கட்சிக்கு போக மாட்டேன்.!" - இபிஎஸ் கூட்டத்தைப் புறக்கணித்த அதிமுக எம்.எல்.ஏ. பின்னணி என்ன..?

"சுடுகாட்டிற்குப் போவேனே தவிர மாற்றுக்கட்சிக்கு போக மாட்டேன்.!" - இபிஎஸ் கூட்டத்தைப் புறக்கணித்த அதிமுக எம்.எல்.ஏ. பின்னணி என்ன..?

Tamizhan media 3 days ago

திமுக மாவட்ட நிர்வாகிகளுடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடத்தி வரும் ஆலோசனைக் கூட்டத்தில், ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எம்.

சுகுமார் மற்றும் முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி ஆகிய இரு எம்.எல்.ஏ-க்கள் பங்கேற்கவில்லை. ஏற்கனவே ஆறு அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ள சூழலில், இவர்களின் இந்த வருகையின்மை அவர்கள் தலைமை மீது அதிருப்தியில் உள்ளனரா அல்லது மாற்றுக்கட்சிக்கு மாறுகிறார்களா என்ற பல்வேறு அரசியல் விவாதங்களையும் கேள்விகளையும் எழுப்பியது.

இந்த விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விளக்கமளித்துள்ள ஆற்காடு எம்.எல்.ஏ எஸ்.எம். சுகுமார், கூட்டத்தில் பங்கேற்காததற்குத் தொகுதிப் பணிகளே காரணம் என்று கூறியுள்ளார். தன் தொகுதி வளர்ச்சி குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற, சுமார் 300 அதிகாரிகள் பங்கேற்ற முக்கியமான கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டியிருந்ததால், அதிமுக கூட்டத்திற்கு வர முடியாது என்பதை முன்னரே கட்சித் தலைமையிடம் தெரிவித்துவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தனக்கு என்றும் எடப்பாடி பழனிசாமி தான் பொதுச்செயலாளர் என்றும், தான் அதிமுகவிலேயே நீடிப்பேன் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். 100 சதவீதம் தனக்கு மாற்றுக்கட்சிக்குச் செல்லும் எண்ணம் இல்லை என்று உறுதியளித்த அவர், மற்றொரு எம்.எல்.ஏ-வான கே.சி. வீரமணி தற்போது சீனா சென்றிருப்பதன் காரணமாகவே இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media