Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
தமிழகத்தில் மதுபானங்கள் விலை உயர்வு?. சற்று முன் அமைச்சர் அறிவித்தார்.!

தமிழகத்தில் மதுபானங்கள் விலை உயர்வு?. சற்று முன் அமைச்சர் அறிவித்தார்.!

Tamizhan media 1 week ago

மிழகத்தில் மதுபானங்களின் விலை உயராது என்று அமைச்சர் விக்னேஷ் உறுதியளித்துள்ளார், இது மதுப்பிரியர்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன், டாஸ்மாக் பணியாளர்களின் 20 ஆண்டுகால நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, அவர்களுக்கு விரைவில் 'இஎஸ்ஐ' மருத்துவக் காப்பீட்டு அட்டை வழங்கப்படும் என்ற ஒரு முக்கிய அறிவிப்பையும் அவர் வெளியிட்டுள்ளார்.

மேலும், FL3 உரிமம் பெற்ற பப்களில் 21 வயதுக்குட்பட்ட நபர்களுக்கு மது விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால், உடனடியாக அவற்றின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும், டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் பணம் வசூலிக்கும் ஊழியர்கள் மீது சஸ்பெண்ட் உள்ளிட்ட கடுமையான ஒழுங்கு நடவடிக்கை பாயும் என்றும் அமைச்சர் அதிரடியாக எச்சரித்துள்ளார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media