Dailyhunt
திமுகவா..? தேமுதிகவா..? பிரேமலதா விஜயகாந்த் பதிவால் பெரும் பரபரப்பு..!!

திமுகவா..? தேமுதிகவா..? பிரேமலதா விஜயகாந்த் பதிவால் பெரும் பரபரப்பு..!!

Tamizhan media 1 week ago

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தனது 'X' சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட ஒரு பதிவு பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் டி.பி. சரவணனுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்த அவர், தனது பதிவில் அவரை ‘திமுக வேட்பாளர்’ என்று தவறாகக் குறிப்பிட்டுள்ளார். கூட்டணி குழப்பமா அல்லது கவனக்குறைவா எனப் பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில், இந்த விவகாரம் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

ஏற்கனவே காட்டுமன்னார்கோவில் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் வேட்பாளரை அறிவித்து அதிர்ச்சி கொடுத்திருந்த நிலையில், பிரேமலதாவின் இந்தப் பதிவு மேலும் பரபரப்பை ஊட்டியுள்ளது. ஒரு தொகுதியை தேமுதிக திமுகவிற்கு விட்டுக் கொடுத்துவிட்டதா அல்லது இது வெறும் எழுத்துப்பிழையா என அரசியல் விமர்சகர்கள் விவாதித்து வருகின்றனர். 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள வேளையில், இதுபோன்ற சிறிய தவறுகளும் பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளன.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media