உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹாவில் நிகழ்ந்த இந்தச் சம்பவம், மனித நேயத்தின் உச்சத்தையும் சாலைப் பாதுகாப்பின் அவசியத்தையும் ஒரே நேரத்தில் பறைசாற்றுகிறது.
சாலை கடந்து பாதுகாப்பாக மறுபுறம் சென்ற 6 வயது சிறுமி, அச்சத்தில் உறைந்து நின்ற தனது தோழியைத் தனியே விட மனமில்லாமல் மீண்டும் உதவி செய்யச் சென்றுள்ளார்.
மேலும் தன் தோழியின் கைகளைப் பற்றிக்கொண்டு பாதுகாப்பாக அழைத்து வர முயன்ற அந்தப் பிஞ்சு உள்ளத்தின் அன்பை, அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் சிதைத்துவிட்டது. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில், உதவி செய்யச் சென்ற அந்த மாசூம் சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது பார்ப்போர் நெஞ்சைப் பதற வைக்கிறது.
“>
இந்தத் துயரம் ஒருபுறம் சிறுமியின் தியாகத்தைப் போற்றினாலும், மறுபுறம் நமது சாலைப் பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் ஓட்டுநர்களின் பொறுப்பற்றத் தன்மையைக் கேள்விக்குறியாக்குகிறது. சாலையில் பாதசாரிகள், குறிப்பாகச் சிறுவர்கள் கடக்கும்போது கவனமாக இருக்க வேண்டியது ஓட்டுநர்களின் கடமை. ஆனால், அதிவேகப் பயணமும் கவனக்குறைவும் இன்று ஒரு பிஞ்சு உயிரைப் பறித்து, மற்றொரு சிறுமியை உயிருக்குப் போராடும் நிலைக்குத் தள்ளியுள்ளது.
இந்நிலையில் அப்பாவித்தனத்தின் விலை உயிராக இருக்கக் கூடாது என்பதும், சாலைகளில் வேகத்தை விட விவேகமே முக்கியம் என்பதும் இச்சம்பவத்தின் மூலம் நாம் கற்கும் கசப்பான பாடமாகும். இதுபோன்ற மரணங்களைத் தடுக்க ஓட்டுநர்கள் மத்தியில் விழிப்புணர்வும், கடுமையான சட்ட நடவடிக்கைகளும் அவசியமாகிறது.

