கிட்டத்தட்ட 4 ஆண்டுகளாக, சனியின் தாக்கத்தால் கடுமையாக அவதிப்பட்டு வரும் ராசிகளில் ஒன்று கடக ராசி. 2023 ஜனவரி முதல் கடக ராசிக்கு சனி பெயர்ச்சி அஷ்டம சனியாக தொடங்கியது.
இதைப் படிங்க: கடக ராசிக்கு அஷ்டம சனியின் தாக்கம் எப்போதுமே எதிர்மறையாக இருக்காது.
இன்னும் சில மாதங்களில், 2024 சனி பெயர்ச்சி முடிந்து 2025 சனி பெயர்ச்சி நடக்க இருக்கிறது. 2025 மார்ச் மாதம் முடிவில், கடக ராசியினர் அஷ்டமசனியின் தாக்கத்தில் இருந்து முழுமையாக விடுபட முடியும்.
எல்லா ராசிகளுக்கும் அஷ்டம சனி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தாது. கடக ராசியை பொறுத்தவரை ஏழாம் வீடு என்று அறியப்படும் சம சப்தமஸ்தானமான மகர ராசிக்கும் அதிபதி சனிதான். ஏழாம் வீடு என்பது திருமணம், வாழ்க்கை துணை, பார்ட்னர்ஷிப் தொழில் உள்ளிட்டவற்றை குறிக்கும். எனவே ஏழாம் வீட்டு அதிபதி சனி எட்டாவது வீட்டில் அஷ்டம ஸ்தானத்தில் மறைவது என்பது இது குறித்த விஷயங்களில் பலவிதமான நெருக்கடிகளையும் ஏமாற்றங்களையும் ஏற்படுத்தி இருக்கும்.
கடந்த ஆண்டுகளைப் போல இல்லாமல் 2024 சனிப்பெயர்ச்சி, கடகத்துக்கு அஷ்டம சனியாக இருந்தாலும் கூட, தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைவதை கடக ராசியினர் கண்கூடாக உணர முடியும். ராசிக்குள்ளேயே நட்சத்திரங்களில் பிரவேசிக்கும் அடுத்த நட்சத்திரத்திற்கு சென்று சஞ்சரிக்கும் சனி பகவான் கடக ராசியினருக்கு அஷ்டம சனியின் இறுதி மாதங்களில் நன்மையை செய்வார் என்று ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல் ஜூன் மாதம், சனி பகவான் வக்கிரமடைய போகிறார். வக்ரம் என்பது பின்னோக்கி சுழல்வதை குறிக்கும். 2024 சனியின் வக்கிரப் பயிற்சி நன்மை அளிக்க போகும் ராசிகளில் கடக ராசியும் ஒன்று. அஷ்டம சனியின் தாக்கம் கடக ராசிக்கு வெகுவாக குறைந்து, சனி வக்கிரமாக இருக்கும் ஆறு மாத காலங்களும் நிம்மதியாக உணர்வீர்கள், நெருக்கடிகள் குறையும் தடைகள் விலகும்.
அதற்கு பின்னர் மூன்று மாதத்தில், 2025 சனிப்பெயர்ச்சி நடக்கும். சனி கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆவார். இது கடக ராசிக்கு அஷ்டமசனி உறிந்து பாக்கியசனியின் தொடக்கத்தை குறிக்கும். சனிப்பெயர்ச்சி மிகச் சிறந்த பலன்களை அளிக்கக்கூடிய ராசிகளில் ஒன்பதாவது வீட்டில் பெயர்ச்சி ஆவது குறிக்கும். எனவே, கடக ராசிக்கு, இன்னும் சில நாட்களில் சனி வக்கிர பெயர்ச்சி மற்றும் அதற்கு அடுத்த காலத்தில் உடனடியாக வரக்கூடிய பாக்கிய சனி பெயர்ச்சி ஆகிய இரண்டுமே அஷ்டம சனியின் தாக்கத்தை பெரிதாக உணர வைக்காது.

