Donald Trump Daughter Akshardham Temple Visit: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் மகள் டிஃபானி டிரம்ப், வெள்ளிக்கிழமை (மே 29) அன்று இந்தியாவின் தலைநகரான அடேல்லியில் உள்ள சுவாமிநாராயண அக்ஷர்தாம் கோவிலுக்கு சென்றுள்ளார்.
டிஃபனி ட்ரம்ப் தனது கணவர் மைக்கேல் பௌலோஸ் மற்றும் நண்பர்ளுடன் சென்றிருப்பதாகவும், சமூக ஊடகங்களில் தங்கள் பயணம் மற்றும் அனுபவத்தின் சிறப்பம்சங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இந்தியாவிற்கு வருகை தந்திருந்த டொனால்ட் அவர்களின் மகள் மற்றும் அவரது கணவர் தங்களது பயணத்தின் பொழுது, டெல்லியில் உள்ள புகழ்பெற்ற அக்ஷர்தாம் கோவிலுக்கு சென்றது நம்ப முடியாத அனுபவமாக இருக்கிறது என்று பகிர்ந்திருக்கிறார். இதன் கட்டிடக்கலை நாட்டின் கலாச்சாரம் மற்றும் ஆன்மீக ரீதியான முக்கியத்துவம் ஆகிய அனைத்துமே என்னை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கிறது என்று அவர் குறிப்பிட்டு இருந்தார்.
டிஃபனி ட்ரம்ப் கோவிலுக்கு சென்ற தனது அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார்.

அதேபோல கோவில் நிர்வாகமும், X தளத்தில் இதைப்பற்றி பதிவு செய்துள்ளது. "கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை ஆராய்ந்த ஒரு அழகான நாள் இது. டிஃபனி டிரம்ப், மைக்கேல் பௌலோஸ் மற்றும் அவர்களின் நண்பர்களை புது தில்லியில் உள்ள பிஏபிஎஸ் சுவாமிநாராயண அக்ஷர்தாமில் வரவேற்றதில் பெருமை," என்று பயணத்தின் முக்கியத்துவம் மற்றும் ஒரு முக்கிய கலாச்சார தளமாக கோயிலின் பங்கு குறித்து பகிரப்பட்டுள்ளது.
டிஃபனி டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது முன்னாள் மனைவி மார்லா மேப்பிள்ஸ் ஆகியோரின் நான்காவது குழந்தை ஆவார். டொனால்ட் டிரம்ப் ஜூனியர், இவாங்கா டிரம்ப், எரிக் டிரம்ப் மற்றும் பாரன் டிரம்ப் ஆகியோரின் ஒன்றுவிட்ட சகோதரி. டிஃபனி 2020-இல் ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழக சட்ட மையத்தில் ஜூரிஸ் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.
அமெரிக்க-லெபனான் தொழிலதிபரான மைக்கேல் பௌலோஸ், டிஃபனி டிரம்ப்பை மணந்துள்ளார். இந்த ஜோடி நவம்பர் 12, 2022 அன்று திருமணம் செய்து கொண்டது, மேலும் அவர்கள் அடிக்கடி பொது நிகழ்ச்சிகளிலும் சர்வதேச நிகழ்வுகளிலும் பங்கேற்கிறார்கள்.
Kodaikanal Village: கொடைக்கானலில் மறைந்திருக்கும் 3000 ஆண்டு பாரம்பரியம்.... பழமையான முருகன் கோவிலின் சிறப்புகள்
அக்ஷர்தாம் என்பது கடவுளின் வசிப்பிடம் என்பதாகும். தூய்மையான பக்தி, அன்பு மற்றும் அமைதிக்கான புனிதமான இடமாகும். மகா விஷ்ணுவின் அவதாரங்களை, முனிவர்கள், தேவர்கள் உள்ளிட்டவர்களின் சிறப்புகளை வெளிப்படுத்தும் ஒரு அழகான மந்திர்.
அக்ஷர்தாம் கோவில், மிக அழகான கட்டமைக்கப்பட்டு, கண்களுக்கு மனதுக்கும் விருந்தளிப்பதாகவும் நுணுக்கமான கட்டிடக்கலைக்கு சான்றாகவும் அமைந்துள்ளது. பளபளப்பான இத்தாலியன் பளிங்கு மற்றும் இளஞ்சிவப்பு மணற்கற்களால் கட்டப்பட்டிருக்கும் அக்ஷர்தாம் கோயில், அழகான இடம் மட்டுமல்ல, அமைதியின் அடையாளமாகவும், பக்தியின் மிகப்பெரிய சாதனையாகவும் உள்ளது. பல்லாயிரம் தன்னார்வலர்களின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டது தான் இந்த மந்திர். செவ்வாய் முதல் ஞாயிறு வரை காலை 10 மணி முதல் மாலை 6:30 மணி வரை திறந்திருக்கும். திங்கட்கிழமை அக்ஷர்தாம் மூடப்பட்டிருக்கும்.

