Dailyhunt
கண்ணை மறைத்த காமம்.. பெங்களுருவில் கூலித்தொழிலாளியை கொலை செய்து சாக்கில் கட்டி வீசிய கொடூரம்.. | Bengaluru

கண்ணை மறைத்த காமம்.. பெங்களுருவில் கூலித்தொழிலாளியை கொலை செய்து சாக்கில் கட்டி வீசிய கொடூரம்.. | Bengaluru

ர்நாடகா மாநிலம் பெங்களூரு (Bengaluru) அருகே உள்ள யாரண்டஹள்ளி பகுதியில் ஓடிசாவை சேர்ந்த சுனில் நாயக் தனது மனைவி புஷ்பாவுடன் தங்கி கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார்.

காலையில் கூலி வேலைக்கு செல்லும் மாலையில் வீடு திரும்பிவிடுவார். இந்நிலையில் மார்ச் 25-ம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய சுனில் நாயக் அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த புஷ்பா (Pushpa) தனது வீட்டின் உரிமையாளர் ஆனந்த் என்பவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். கணவரின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டால் சுவிட்ச் ஆஃப் என்று வருகிறது எனக் கூறியுள்ளார். இதனையடுத்து ஆனந்த், புஷ்பா மற்றும் அவரது உறவினர்கள் சுனில் நாயக்-கை தேடி உள்ளனர்.

இந்நிலையில் யாரண்டஹள்ளியில் உள்ள ஆர்.கே. டவுன்ஷிப் லேஅவுட் பகுதியில் ஒரு மதுக்கடை உள்ளது. சுனில் நாயக்-க்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் அந்தப்பகுதியில் சென்று தேடியுள்ளனர். அப்போது மதுக்கடை அருகே காலியான இடத்தில் சாக்கு மூட்டை ஒன்று கிடந்தது. எதேச்சையாக மூட்டையாக அங்கிருந்தவர்கள் பிரித்து பார்த்துள்ளார். அதில் சுனில் நாயக் கொலை செய்யப்பட்டு அவரது உடல் அதில் திணிக்கப்பட்டிருந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்தவர்கள் இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் சாக்குப்பையில் சடலமாக கிடந்த சுனில்நாயக் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

: காதல் திருமணம்.. திருட்டு பட்டம்.. மகளை ஆணவக்கொலை செய்த தந்தை கைது


இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அவரது மனைவியிடம் விசாரிக்கையில் மார்ச் 25-ம் தேதி மதிய உணவு சாப்பிட்டு விட்டு சென்றவர் அதன்பின்னர் வீடு திரும்பவில்லை எனக் கூறியுள்ளார். சுனில் நாயக்கின் நண்பர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரித்தனர். அப்போது சுனில் நாயக் மற்றும் அவரது நண்பர் மாலிக் என்பவர் மார்ச் 25-ம் தேதி அப்பகுதியில் மதுவாங்கி சென்றதாக சிலர் கூறியுள்ளனர். இதனையடுத்து மாலிகை விசாரணை வளையத்துக்குள் போலீசார் கொண்டு வந்தனர். போலீசாரின் விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியானது. சுனிலை கொலை செய்ததை மாலிக் ஒப்புக்கொண்டார்.


நண்பன் மனைவி மீது மோகம்

இதுகுறித்து போலீசார் கூறுகையில், " சுனில் நாயக் மற்றும் மாலிக் இருவரும் கூலித்தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றனர். இதன்காரணமாக மாலிக் அவரது வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். இந்நிலையில் புஷ்பாவின் மீது மாலிக் ஆசை வந்துள்ளது. அவரை அடையை சுனில் நாயக் தடையாக இருப்பார் எனக் கருதியுள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு, மாலிக் மது போதையில் நாயக்கின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார். பின்னர் அவரது உடலை சாக்கில் கட்டி வேறு எங்காவது அப்புறப்படுத்த திட்டமிட்டார். இருப்பினும், மதுக்கடைக்கு அருகே இருந்தவர்களைப் பார்த்ததும், உடலை காலியான இடத்தில் விட்டுவிட்டார். கொலைக்கு நடந்த சில நாட்களுக்கு முன்பு, நாயக் மதுபோதையில் புஷ்பாவை அடித்துள்ளார்.

: நண்பனின் காதலி மீது மோகம்.. வடமாநில தொழிலாளி கொலையில் பகீர் தகவல்... 2 பேர் கைது


இதனை அந்தப்பெண் மாலிக்கிடம் கூறி வருத்தப்பட்டுள்ளார். வேலை முடிந்து வீட்டுக்கு வந்ததும் கணவர் அடிக்கடி சண்டை போடுவதாகவும் கூறியுள்ளார். புஷ்பாவின் மீது இருந்த ஆசையில் நாயக்கை கொலை செய்துள்ளார். குற்றவாளியிடம் இருந்து கத்தியை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் போலீசாரின் விசாரணையில் இந்த கொலைக்கு அந்தப்பெண்ணுக்கு எந்த தொடர்பும் இல்லை எனத் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Times Now Seithi