Thirupugazh Lyrics: சுப்பிரமணியருக்கு மிஞ்சிய கடவுள் இல்லை என்பது காலம் காலமாக முருகனின் ஆற்றலை, கருணையை, வேண்டியது கிடைக்கும் வல்லமையைக் குறிக்கிறது.
தீராத நோய்கள், நாள்பட்ட உடல் நல பாதிப்புகள், மனக்குழப்பங்கள் போன்றவை தீர, முருகப்பெருமானின் மந்திரங்கள் உள்ளன. அதில் முதன்மையானது, திருப்புகழில் உள்ள சில வரிகள். முருகப்பெருமான் நேரடியாகக் காட்சி தந்த அருணகிரிநாதர் அவர்கள், உலக மக்கள் மீது கொண்ட கருணையாலும் அன்பாலும், திருத்தணி முருகனைப் புகழ்ந்து பாடிய திருப்புகழில் உள்ள சக்தி வாய்ந்த திருமந்திரம் திருப்பதிகமாகப் போற்றப்படுகிறது.
திருப்புகழில் உள்ள இந்த பாடலை பக்தர்கள் தினமும் ஒரு முறை கூறி வந்தால், கேட்டு வந்தால், பலவிதமான நோய்கள் விலகும், பயம் நீங்கும் என்று நம்பப்படுகிறது. மேலும், நோய்கள் அணுகாத பாதுகாப்பையும் அளிக்கும் எனவும் கூறப்படுகிறது. உடல்நலம், மனநலம் மற்றும் வளமான வாழ்வு கிடைக்க வேண்டி, அடிகளார் இந்தப் பாடலை அருளியதாக அறியப்படுகிறது.
தமிழ்நாட்டில் எந்தெந்த கோவில்களில் சித்திரை திருவிழா நடக்கும் தெரியுமா?
நோய் தீர்க்கும் திருப்புகழ்பாடல் வரிகள் - Thiruppugazh Song to Get rid of Diseases Mantram Lines in Tamil
இருமலு ரோக முயலகன் வாத
மெரிகுண நாசி விடமே நீ
இழிவுவிடாத தலைவலி சோகை
எழுகள மாலை இவையோடே
பெருவயிறீளை எரிகுலை சூலை
பெருவலி வேறு முளநோய்கள்
பிறவிகள் தோறும் எனை நலியாத
படியுன் தாள்கள் அருள்வாயே
வருமொரு கோடி அசுரர் பதாதி
மடியஅநேக இசைபாடி
வருமொரு கால வயிரவர் ஆட
வடிசுடர் வேலை விடுவோனே
தருநிழல் மீதில் உறைமுகில் ஊர்தி
தருதிரு மாதின் மணவாளா
சலமிடை பூவின் நடுவினில் வீறு
தணிமலை மேவு பெருமாளே
இருமலு ரோக முயலகன் - வீடியோ | Lord Murugan Mantra Irumalu Roga - Thiruthani | Thiruppugazh Video

