Dailyhunt
Lord Murugan Mantra: தீராத நோய்களைத் தீர்க்கும், கவசமாக காக்கும் சக்தி வாய்ந்த முருகன் மந்திரம்

Lord Murugan Mantra: தீராத நோய்களைத் தீர்க்கும், கவசமாக காக்கும் சக்தி வாய்ந்த முருகன் மந்திரம்

Thirupugazh Lyrics: சுப்பிரமணியருக்கு மிஞ்சிய கடவுள் இல்லை என்பது காலம் காலமாக முருகனின் ஆற்றலை, கருணையை, வேண்டியது கிடைக்கும் வல்லமையைக் குறிக்கிறது.

தீராத நோய்கள், நாள்பட்ட உடல் நல பாதிப்புகள், மனக்குழப்பங்கள் போன்றவை தீர, முருகப்பெருமானின் மந்திரங்கள் உள்ளன. அதில் முதன்மையானது, திருப்புகழில் உள்ள சில வரிகள். முருகப்பெருமான் நேரடியாகக் காட்சி தந்த அருணகிரிநாதர் அவர்கள், உலக மக்கள் மீது கொண்ட கருணையாலும் அன்பாலும், திருத்தணி முருகனைப் புகழ்ந்து பாடிய திருப்புகழில் உள்ள சக்தி வாய்ந்த திருமந்திரம் திருப்பதிகமாகப் போற்றப்படுகிறது.

திருப்புகழில் உள்ள இந்த பாடலை பக்தர்கள் தினமும் ஒரு முறை கூறி வந்தால், கேட்டு வந்தால், பலவிதமான நோய்கள் விலகும், பயம் நீங்கும் என்று நம்பப்படுகிறது. மேலும், நோய்கள் அணுகாத பாதுகாப்பையும் அளிக்கும் எனவும் கூறப்படுகிறது. உடல்நலம், மனநலம் மற்றும் வளமான வாழ்வு கிடைக்க வேண்டி, அடிகளார் இந்தப் பாடலை அருளியதாக அறியப்படுகிறது.

தமிழ்நாட்டில் எந்தெந்த கோவில்களில் சித்திரை திருவிழா நடக்கும் தெரியுமா?


நோய் தீர்க்கும் திருப்புகழ்பாடல் வரிகள் - Thiruppugazh Song to Get rid of Diseases Mantram Lines in Tamil
இருமலு ரோக முயலகன் வாத
மெரிகுண நாசி விடமே நீ

இழிவுவிடாத தலைவலி சோகை
எழுகள மாலை இவையோடே

பெருவயிறீளை எரிகுலை சூலை
பெருவலி வேறு முளநோய்கள்

பிறவிகள் தோறும் எனை நலியாத
படியுன் தாள்கள் அருள்வாயே

வருமொரு கோடி அசுரர் பதாதி
மடியஅநேக இசைபாடி

வருமொரு கால வயிரவர் ஆட
வடிசுடர் வேலை விடுவோனே

தருநிழல் மீதில் உறைமுகில் ஊர்தி
தருதிரு மாதின் மணவாளா

சலமிடை பூவின் நடுவினில் வீறு
தணிமலை மேவு பெருமாளே

இருமலு ரோக முயலகன் - வீடியோ | Lord Murugan Mantra Irumalu Roga - Thiruthani | Thiruppugazh Video



அருணகிரிநாதர் இந்த திருப்புகழ் பாடினால், அல்லது கேட்டு வந்தால், தீரும் என்று
குறிப்பிடப்படும் நோய்கள்

  • இருமல்
  • ரோகம் (பொது நோய்கள்)
  • வாதம்
  • தலைவலி
  • சோகை
  • வயிற்று கோளாறுகள்
  • உடல் வலி
  • பல்வேறு நீண்டநாள் நோய்கள்

கோவிலில் செருப்பு தொலைந்து போனால் நல்லதா கெட்டதா?

குறிப்புகள்: கலியுகக் கடவுளான முருகப்பெருமானை வழிபாட்டு வந்தால், வாழ்வில் நடக்கும் துன்பங்கள் நீங்கி, நிம்மதியான மகிழ்ச்சியான வாழ்வு கிடைக்கும். பொதுவாக, முருகனுக்கு உகந்த பாடல் அல்லது முருக மந்திரம் என்றாலே, கந்த கஷ்டி கவசம் தான் பலருக்கும் நினைவுக்கு வரும். கந்த சஷ்டி கவசத்தை தொடர்ந்து பாடி வந்தால், கேட்டு வந்தால், எவ்வளவு கடுமையான பிரச்சனைகளும் நீங்கும் என்பதும் நம்பிக்கை. திருப்புகழில், வெவ்வேறு பிரச்சனைகளைத் தீரும் வெவ்வேறு பாடல்கள் உள்ளன, அதே போல, அருள் தரும், வரம் பெற்றுத் தரும், அனுகிரகப் பாடல்களும் உள்ளன. தினமும் நம்பிக்கையுடன் பாடலை பாடியோ, கேட்பது சிறந்தது!

Disclaimer: இந்தப்பதிவு ஆன்மீக மற்றும் ஜோதிட நம்பிக்கைகளின் படிஎழுதப்பட்டதாகும். இதில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்களுக்கு அறிவியல் தொடர்பான விளக்கம் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Times Now Seithi