Chennai School Holiday On April 15: சென்னையில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சி தரும் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, ஏப்ரல் 15ஆம் தேதி (நாளை மறுநாள்) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மட்டுமே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏன் ஏப்ரல் 15ஆம் தேதி விடுமுறை?
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடாக ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அந்த பயிற்சியில் ஆசிரியர்கள் கலந்து கொள்ள வேண்டியிருப்பதால், பள்ளிகளில் வகுப்புகள் நடத்த இயலாது. இதனால், ஏப்ரல் 15ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அதிமுக தான் காரணம்.. புள்ளி விவரங்களுடன் இபிஎஸ் பேச்சு!
தொடர்ந்து இரண்டு நாட்கள் விடுமுறை
ஏற்கனவே ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஏப்ரல் 14 மற்றும் 15 ஆகிய இரண்டு நாட்களும் தொடர்ச்சியாக விடுமுறை கிடைக்கிறது. இதனால், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இருவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
கோடை விடுமுறை எப்போது?
தமிழகத்தில் 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற்று வரும் ஆண்டு இறுதி தேர்வுகள் இந்த வாரத்துடன் முடிவடைகின்றன. அதன் பின்னர், ஏப்ரல் 17ஆம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது. இந்த விடுமுறை ஜூன் 1ஆம் தேதி வரை நீடிக்கும் என பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அறிவித்துள்ளது.
முன்கூட்டியே தொடங்கும் கோடை விடுமுறை
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இந்த ஆண்டு தேர்வுகள் முன்கூட்டியே நடத்தப்பட்டு முடிக்கப்பட்டுள்ளன. இதனால், மாணவர்கள் வழக்கத்தை விட சில நாட்களுக்கு முன்பே கோடை விடுமுறையை அனுபவிக்க உள்ளனர். தற்போது, விடுமுறை தொடங்க இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், இந்த கூடுதல் இரண்டு நாள் விடுமுறை மாணவர்களுக்கு பெரிய சந்தோஷமாக அமைந்துள்ளது.
தேர்தல் நாளில் பொது விடுமுறை
ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அந்த நாளும் மாநிலம் முழுவதும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மட்டுமல்லாமல், தனியார் நிறுவனங்களும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை பின்பற்றாத நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- யாருப்பா இந்த பிரஃபுல் ஹிங்கே.? IPL-ல் முதல் ஓவரிலே 3 விக்கெட் வீழ்த்தி அசத்தல்.!
பெற்றோர்களுக்கு முக்கிய அறிவுரை
இந்த விடுமுறை காலத்தில் மாணவர்கள் பாதுகாப்பாக இருக்க பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், குழந்தைகள் வெளியில் செல்லும் நேரம் குறைக்கவும், தண்ணீர் மற்றும் ஆரோக்கியமான உணவுகளை அளிக்கவும் அறிவுறுத்தப்படுகிறது. முடிவில், ஏப்ரல் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் தொடர்ச்சியான விடுமுறை கிடைப்பதால், மாணவர்கள் சிறிய ஓய்வை அனுபவித்து, கோடை விடுமுறையை வரவேற்க தயாராக உள்ளனர்.

