Dailyhunt
Serial May 7 Episode:  ஜீவாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி..வாகை சூடா சீரியலில் இன்று என்ன நடக்க போகிறது?

Serial May 7 Episode: ஜீவாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி..வாகை சூடா சீரியலில் இன்று என்ன நடக்க போகிறது?

Serial May 7 Episode: அதாவது, ஜீவா அந்த செக்கின் மீது காபி கப்பை வைத்திருக்க அங்கு வந்த மீனாட்சி செக்கு மேலேயா காபி வேட்பா என அவனை திட்டிவிட்டு அந்த செக்கை எடுத்து செல்ல ஜீவாவின் நண்பன் அந்த பொண்ணுக்கு நீ எல்லாம் முக்கியம் கிடையாது செக்கும் ஆடி கார்ல வர மாப்பிள்ளையும் தான் முக்கியம் என்று சொல்ல ஜீவா மீனாட்சி அப்படி கிடையாது என்று சொல்கிறான்.

இதையெல்லாம் மீனாட்சி மறைந்திருந்து பார்க்கிறாள். அதன் பிறகு மீனாட்சி ஆதி வீட்டுக்கு வந்து அவர்கள் கொடுத்த செக் மற்றும் நகையை திருப்பி கொடுக்கிறாள். கல்யாணத்துக்கு முன்னாடி எதையும் வாங்க வேண்டாம் என்று நினைப்பதாக சொல்லி வருகிறாள்.வரும் வழியில் ஜீவாவை அவனது நண்பனுடன் சந்திக்க மீனாட்சி நகையையும் பணத்தையும் திருப்பிக் கொடுத்த விஷயத்தை பற்றி சொல்ல ஜீவா சந்தோஷமடைகிறான்.

அடுத்ததாக ஆதி மீனாட்சி வேலை செய்யும் கம்பெனிக்கு வந்து அந்த கம்பெனியின் எம்டியை பார்த்து உங்களுக்கு நிறைய ஆர்டர் கொடுக்கலாமே இருக்கேன். என்னுடைய பியான்சி மீனாட்சி இங்கதான் வேலை பாக்குறாங்க என்று சொல்லிக் கொண்டிருக்க மீனாட்சி ஆதியை பார்த்து விடுகிறாள்.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய வாகை சூடவா சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

கார்த்தியிடம் சிக்கிய மருது... நிக்க போகும் ரேவதி கல்யாணம்! கார்த்திகை தீபம் அப்டேட்

கார்த்திகை தீபம் Serial இன்றைய எபிசோட் அப்டேட்

Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சாமுண்டீஸ்வரி கார்த்திக்கு சவால் விட இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.அதாவது சாமுண்டீஸ்வரி கொடுத்த புடவை பற்றி எரிய கார்த்திக் வாங்கி கொடுத்த புடவையை கட்ட வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. இதைத்தொடர்ந்து ரேவதி கார்த்திக் வாங்கி கொடுத்த புடவையில் நடந்து வர சாமுண்டீஸ்வரி கடுப்பாகி இந்த புடவை எதுக்கு கட்டின என்று கேட்க நடந்த விஷயத்தை சொல்கிறார்.

பிறகு சூரிய கலா கார்த்தியை ஏதாவது பண்ணனும் என்று யோசித்து ஆசிரமத்தில் பரிமாறப்படும் உணவில் விஷத்தை கலந்து விடலாம் என முடிவெடுக்கிறாள். அதற்கான வேலைகளையும் செய்து விடுகிறான்.பிறகு இளையராஜா கார்த்திக் நான் கொடுத்ததாக சொல்லி அதை வாங்கி கொண்டு ஆசிரமத்திற்கு வந்து பணத்தை கொடுக்கிறான். பிறகு ரொம்ப பசிக்குது சாப்பாடு போடுங்க என்று சொல்லி விஷம் கலந்த சாப்பாட்டை சாப்பிட்டு அங்கிருந்து கிளம்பும்போது வழியில் மயங்கி விடுகிறான்.

இறுதியாக அவன் கார்த்தியிடம் பேசியிருக்க இளையராஜாவை காப்பாற்றிய மக்கள் கார்த்திக்கு போன் செய்து அவனை அட்மிட் செய்த ஹாஸ்பிடல் குறித்த தகவலை தெரிவிக்கின்றனர். பிறகு கார்த்திக் ஹாஸ்பிடலுக்கு ஓடி வருகிறான்.இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Times Now Seithi