Dailyhunt
Tamil Thai Valthu Lyrics: சிலிர்க்க வைக்கும் தமிழ் தாய் வாழ்த்து நீராருங் கடலுடுத்த லிரிக்கஸ்!

Tamil Thai Valthu Lyrics: சிலிர்க்க வைக்கும் தமிழ் தாய் வாழ்த்து நீராருங் கடலுடுத்த லிரிக்கஸ்!

Tamil Thai Valthu Lyrics: தமிழ் தாய் வாழ்த்துநீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்

தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே! தமிழணங்கே!
உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!

தமிழக அரசின் அதிகாரப்பூர்வ தமிழ்த்தாய் வாழ்த்து பாடலான "நீராடும் கடலுடுத்த..." பாடலை எழுதியவர் மனோன்மணீயம் பெ. சுந்தரனார். 1891-ஆம் ஆண்டு எழுதிய 'மனோன்மணீயம்' என்ற புகழ்பெற்ற நாடக நூலின் தொடக்கத்தில் இடம்பெற்ற "தமிழ்த் தெய்வ வணக்கம்" என்ற பாடலின் சுருக்கமான பகுதியே தமிழ்த்தாய் வாழ்த்தாக தேர்ந்தெடுக்கப்பட்டது. 1913 ஆம் ஆண்டு நடைபெற்ற கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ் தாய் வாழ்த்து பாட வேண்டும் என்கிற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 1914ஆம் ஆண்டு முதல் தமிழ் சங்க கூட்டங்களில் தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டது. 1970 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தமிழ் தாய் வாழ்த்து தமிழக அரசின் அதிகாரப்பூர்வ பாடல் என அறிவிக்கப்பட்டது. பாடலை எழுதிய சுந்தரனார், 1897 ஏப்ரல் 26 அன்று தன்னுடைய 42வது வயதிலேயே மறைந்து விட்டார். அவர் மறைந்தாலும் அவர் எழுதிய பாடல் மறையாத புகழுடன் திகழ்கிறது.

ல்லரிக்க வைக்கும் இந்தியாவின் தேசிய பாடல் வந்தே மாதரம் பாடல் லிரிக்ஸ்!

2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் "நீராரும் கடலுடுத்த" என்கிற தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை அனைத்து பள்ளி கல்லூரிகளில் பொதுத்துறை நிறுவனங்களில் கட்டாயம் பாட வேண்டும் எனவும். தமிழ் தாய் வாழ்த்து பாடும் பொழுது மாற்றுத்திறனாளிகள் தவிர்த்து அனைவரும் கட்டாயம் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் எனவும் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது


தமிழ் தாய் வாழ்த்து பாடல் பொருள் விளக்கம்:

"உலகம் முழுவதும் நீர் நிறைந்த கடலையே ஆடையாக அணிந்த நிலம் எனும் பெண்ணுக்கு மிகுந்த அழகு மிளிரும் சிறப்பு நிறைந்த முகமாக திகழ்கிற இந்திய கண்ட நிலத்தில் உள்ள தென்னாடும், அந்த தென்னாட்டிலும் மிகச்சிறந்த தமிழர்கள் நிறைந்த நல்ல திருநாடும், பொருத்தமான பிறைபோன்ற நெற்றி யாகவும், அதில் இட்ட மணம் வீசும் திலகமாகவும் திகழ்கின்றன. அந்த திலகத்தில் இருந்து வீசுகின்ற நறுமணத்தை போல உலகம் அனைத்தும் இன்பம் பெறும் வகையில் அனைத்து திசைகளிலும் புகழ் மணக்கும் படி இருக்கின்ற பெருமைமிகு தமிழ் பெண்ணே! என்றும் இளமையாக இருக்கும் உன் சிறப்பு திறமையை வியந்து எங்கள் செயல்களை மறந்து உன்னை வாழ்த்துவோமே! வாழ்த்துவோமே! வாழ்த்துவோமே!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் போது அனைவரும் தவறாமல் எழுந்து நிற்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு இவ்வரசாணையின்படி தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடப்படும்போது எழுந்து நிற்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.பொதுநிகழ்வுகளின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது தமிழ்நாட்டில் தொடர்ந்து ஊக்குவிக்கப்படுகிறது. விஜய் முதல்வர் விழாவில் இது நடக்காமல் போனது பெரும் சர்ச்சைக்கும் விவாதத்திற்கும் ஆளான நிலையில், இனி இதுப்போல் நடக்காது என விளக்கம் அளித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Times Now Seithi