Thanjavur Power cut: தமிழ்நாட்டில் பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு மின்நிலையங்கள் மற்றும் துணை மின் நிலையங்களில் மாதாந்திர முறையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
அத்தகைய சமயங்களில் மின் பாதைகளில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த பராமரிப்பு பணிகளின் போது சம்பந்தப்பட்ட மின் பாதைகளை சேர்ந்த பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.இதுதொடர்பாக அப்பகுதி மக்களுக்கு முன்னறிவிப்பு மூலம் தகவல் தரப்படுவது வழக்கம்.
தமிழ்நாட்டில் கடந்த பிப்ரவரி மாதத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கியது. அதை தொடர்ந்து மார்ச் மாதத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள், ஏப்ரல் மாதத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வுகள் நடந்தது. இதற்கிடையில் தமிழக சட்டப்பேரவைக்காக தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதன்காரணமாக கடந்த சில மாதங்களாக மின் நிலையங்கள், துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறவில்லை.
கோடை காலங்களில் தற்போது மின் நுகர்வு அதிகமாக இருக்கிறது.கோடை வெப்பத்தை தவிர்க்க பலரும் வீடுகளில் மின்விசிறி, ஏர் கூலர்கள், ஏசி ஆகியவற்றை பயன்படுத்துவதால் மாநிலத்தில் மின் தேவை அதிகரித்துள்ளது. மாநிலத்தில் பல இடங்களில் அறிவிக்கப்பட்டாத மின் வெட்டுகள் நிலவுகிறது. நகரப்பகுதிகளில் இரவு நேரங்களில் 10 முதல் 15 நிமிடங்கள் வரை மின் தடை செய்யப்படுகிறது. புறநகர், கிராமப்பகுதியில் சொல்லவே தேவையில்லை. பொதுமக்கள் இரவு நேரங்களில் அதிகமாக மின் சாதனங்களை பயன்படுத்துவதால் சில இடங்களில் ஃபீடர்கள் ட்ரிப் ஆகின்றன அதனை சரிசெய்யும் போது மின் தடை ஏற்படுகிறது. தேர்தல் வாக்கு எண்ணிக்கை எல்லாம் முடிந்த நிலையில் தற்போது மின்வாரியம் தரப்பில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்கிறது.
: தமிழ்நாட்டில் 11 மாவட்டத்தில் இடி மின்னலுடன் இன்று வெளுக்கப்போகுது கனமழை.. வானிலை எச்சரிக்கை
அதன்படி தஞ்சாவூரில் நாளை (08.05.2026) வெள்ளிக்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பல்வேறு இடங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரங்கள் பின்வருமாறு.
வீரமரசன்பேட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதன் காரணமாக இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் பூதலூர், செல்லப்பன்பேட்டை, புதுப்பட்டி, மருதக்குடி, ஆவாரம்பட்டி, வெண்டயம்பட்டி, முத்து வீரகண்டன்பட்டி, ஒரத் தூர், அய்யனாபுரம், இந்தளூர், சோளகம்பட்டி, நந்தவனப்பட்டி, பூதராயநல் லூர், சாமிநாதபுரம், சிவசாமிபுரம், மோசஸ்புரம், விண்ணமங்கலம், அடஞ்சூர், மாதுராம், புதுக்கோட்டை, முல்லைக்குடி, தீட்ச சமுத்திரம், தொண்டராயன்படி, ஆற்காடு, சித்திரக்குடி ஆகிய கிராமங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
: தோல்வியும் புதிதல்ல.. துரோகமும் புதிது அல்ல.. காலம் பதில்சொல்லும்.." - காங்கிரஸை விமர்சித்த டி.ஆர்.பாலு
பூண்டி மாதா கோவில் திருவிழா தொடக்கம்:
தஞ்சை மாவட்டத்தில் திருக்காட்டுப்பள்ளிக்கு அருகில் புகழ்மிக்க பூண்டி மாதா பேராலயம் உள்ளது.இந்த பேராலயத்தின் ஆண்டு திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு பேராலய வளாகத்தின் முன்புறம் சிறிய சப்பரத்தில் பூண்டி மாதா சொரூபம் அலங்காரம் செய்து வைக்கப்பட்டிருந்தது.பூண்டி மாதாவின் உருவம் பொறிக்கப்பட்ட கொடி பவனியாக எடுத்து வரப்பட்டது. அப்போது பூண்டி மாதாவின் சொரூபத்தையும் ஜெபமாலை பாடலுடன் பவனியாக எடுத்து வந்தனர். கொடிபவனி கொடி மரத்தை அடைந்ததும், கும்பகோணம் மறை மாவட்ட ஆயர் ஜீவானந்தம் கொடியை புனிதம் செய்து ஏற்றி வைத்து திருவிழாவை தொடங்கி வைத்தார்.

