Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Trichy Power Cut: திருச்சியில் நாளை மின் தடை அறிவிப்பு.. 8 மணி நேரம் பவர் கட்

Trichy Power Cut: திருச்சியில் நாளை மின் தடை அறிவிப்பு.. 8 மணி நேரம் பவர் கட்

Trichy Power Cut: தமிழகத்தில் பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு மின் நிலையங்கள் மற்றும் துணை மின் நிலையங்களில் மாதாந்திர முறையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.

அத்தகைய சமயங்களில் மின் பாதைகளில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பணிகள் மின் வாரியம் தரப்பில் மேற்கொள்ளப்படும். இந்த பராமரிப்பு பணிகளின் போது சம்பந்தப்பட்ட மின் பாதைகளை சேர்ந்த பகுதிகளில் மின்தடை செய்யப்படும். திருச்சி மாவட்டத்தில் நாளை (29.05.2026) வெள்ளிக்கிழமை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக பல்வேறு இடங்களில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள கே.சாத்தனூர் துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின் வினியோகம் பெறும் கே.கே.நகர், இந்தியன்வங்கி காலனி, காஜாமலைகாலனி, எஸ்.எம்.இ.எஸ்.இ. காலனி, கிருஷ்ணமூர்த்திநகர், சுந்தர்நகர், அய்யப்பாநகர், எல்.ஐ.சி.காலனி, பழனிநகர், முல்லைநகர், ஓலையூர், இச்சி காமாலைபட்டி, மன்னார்புரம் ஒரு பகுதி, சிம்கோ காலனி, அகிலாண்டேஸ்வரிநகர், ஆர்.வி.எஸ்.நகர், வயர்லஸ் சாலை, செம்பட்டு ஒரு பகுதி, குடித்தெரு, பாரதிநகர், காமராஜ்நகர், ஜே.கே.நகர், சந்தோஷ்நகர், ஆனந்த்நகர், கே.சாத்தனூர், வடுகப்பட்டி, பாரிநகர், காஜாநகர், ஆர்.எஸ்.புரம், டி.எஸ்.என்.அவென்யூ, குளவாய்பட்டி, ராயல்வில்லா, இ.பி.காலனி, முத்துநகர், ராணிமெய்யம்மைநகர், மொராய்ஸ்சிட்டி, எஸ்.பி.ஓ.ஏ.பள்ளி, பசுமைநகர், அந்தோணியார்கோவில் தெரு, வி.எம்.டி.ரோடு, கலைஞர்நகர், இந்திரநகர், மொராய்ஸ்கார்டன், அம்மன்நகர், எம்.ஜி.ஆர்.நகர் மற்றும் கொட்டப்பட்டு ஒரு பகுதியில் நாளை காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உறையூர் பஞ்சவர்ணசுவாமி கோவில் தேரோட்டத்தையொட்டி உறையூர் பிரிவுக்குட்பட்ட காவேரிநகர், வடிவேல்நகர், செல்வமாரியம்மன்கோவில்தெரு, நவாப்தோட்டம், நெசவாளர்காலனி, வாத்துக்காரத்தெரு, பசுமடம், கீரைக்கொல்லை தெரு, சன்னதிதெரு, பஞ்சவர்ணசுவாமி கோவில்தெரு, சின்னசவுராஷ்டிராதெரு, டாக்கர்ரோடு, ஏ.யு.டி.காலனி, தியாகரா ஜநகர், மின்னப்பன்தெரு, காமாட்சிஅம்மன்கோவில்தெரு, குழுமணி மெயின்ரோடு, ஏ.ஆர்.எஸ்.நகர், மீன்மார்க்கெட் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

: வெயிலுக்கு குட் பை.. 11 மாவட்டத்தில் இன்று இடியுடன் கனமழை வாய்ப்பு.. வானிலை எச்சரிக்கை


திருச்சியில் வேலைவாய்ப்பு:

மிஷன் வத்சல்யா திட்டத்தின் கீழ் திருச்சிராப்பள்ளி மாவட்ட குழந்தைகள் உதவி மையத்தில் திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் மேற்பார்வையாளர் ஆகிய பணிகளில் ஒரு வருட கால தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர்:
திட்ட ஒருங்கிணைப்பாளர் (PROJECT CO-ORDINATOR)
மாதம் - ரூ.28,000/-(மாதம் ஒன்றிற்கு)

பணியிடம் - 1
கல்வித்தகுதி:
சமூகப்பணி/சமூகவியல்/குழந்தைகள் மேம்பாடு/மனித உரிமை, பொது நிர்வாகம் உளவியல்/ மனநலம்/ சட்டம் /பொது சுகாதாரம்/சமுதாய வள மேம்பாடு ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் முதுகலை பட்டம் பெற்றிருத்தல் வேண்டும்.
(அல்லது)
சமூகப்பணி/சமூகவியல்/குழந்தைகள் மேம்பாடு/மனித உரிமை, பொது நிர்வாகம் /உளவியல்/ மனநலம்/ சட்டம் /பொது சுகாதாரம்/சமுதாய வள மேம்பாடு ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் 2 ஆண்டுகள் திட்ட உருவாக்கம் / செயல்படுத்துதல் குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாடு / சமூகநலன் ஆகியதுறைகளில் கண்காணிப்பு மற்றும் மேற்பார்வை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
கணிணி இயக்குவதில் திறன் பெற்றிருக்க வேண்டும். அவசர உதவி எண்களில் பணிபுரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

மேற்கண்ட பதவிகளுக்கான விண்ணப்பபடிவத்தினை https://tiruchirappalli.nic.in/ இணையதளத்தில் இருந்து விண்ணப்ப படிவங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு 0431-2413055 என்ற எண்ணில் தொடர்ப கொண்டு விபரம் பெறலாம் என்று திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Times Now Seithi