Vadalur Woman Murder : கடலூர் மாவட்டம் வடலூரில் இருந்து நெய்வேலி செல்லும் சாலையில் கண்ணுத்தோப்பு பாலம் உள்ளது.இந்த இடத்தில் புறவழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் அந்தப்பகுதியில் அதிக அளவில் மண் குவித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலையில் ஒரு மண் குவியலில் பெண்ணின் கால்கள் வெளியே தெரிந்த நிலையில் இருந்தது. அவ்வழியாக சென்றவர்கள் இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தனையடுத்து நெய்வேலி போலீசார் சம்பவம் இடத்துக்கு விரைந்தனர். கழுத்து அறுக்கப்பட்டு முகம் சிதைக்கப்பட்டிருந்த நிலையில் இருந்த பெண்ணின் சடலத்தை கண்டெடுத்தனர்.
கைகள் துப்பட்டாவால் கட்டப்பட்டு
பெண்ணின் கைகள் துப்பட்டாவால் கட்டப்பட்டிருந்தது. அவரது முகத்தில் கடுமையான காயங்கள் இருந்தது. உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தடயவியல் நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாய் வெற்றி வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் இருந்து மோப்பம் பிடித்தடி சாலை வரை நின்று விட்டது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.
இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் விவரங்கள் தெரியாததால் அப்பகுதியில் மாயமான பெண்கள் குறித்த தகவல்களை போலீசார் சேகரித்தனர். இளம்பெண் சடலமாக கிடந்ததால் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா? அல்லது முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? கள்ளக்காதல் விவகாரத்தில் இந்த கொலை அரங்கேறியதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை மேற்கொண்டனர். உயிரிழந்த பெண் யார் என தெரியாததால் இறந்தது யார் என்பதை கண்டறிவதில் போலீசார் மும்முரம் காட்டினர். குற்றவாளிகளை கண்டறிய தனிப்படை அமைக்கப்பட்டது. காவல்நிலையத்தில் பதிவான மாயமான பெண்கள் குறித்த புகாரும் அவர்கள் கொடுத்த அடையாளங்களும் கண்ணுத்தோப்பு பாலம் பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் அடையாளங்களுடன் ஒத்துப்போகவில்லை. இது போலீசாருக்கு மேலும் சவாலாக இருந்தது. இதனையடுத்து தனிப்படை போலீசார் சுற்றுவட்டாரப் பகுதியில் விசாரனையில் இறங்கினர்.
: நடிகர் அஜித்தின் தாய்க்கு அஞ்சலி செலுத்திய முதலமைச்சர் விஜய்.. நடிகை திரிஷா
சர்வோதயா நகர் பகுதியில் போலீசார் விசாரணை நடத்துகையில் 35வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வீட்டை விட்டு சென்று 2 நாட்கள் ஆகிறது அவர் இன்னும் வீடு திரும்பவில்லை என்ற தகவல் கிடைத்தது. மாயமான பெண் குறித்து அவரது குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் எதுவும் தெரிவிக்காமல் இருந்தது தெரியவந்தது. அது யார் என்ன என்பது குறித்து விசாரிக்கையில் கண்ணன் என்பவரின் மனைவி மஞ்சுளா சென்னையில் உள்ள தனது மகளை பார்க்க சென்றவர் திரும்பி வரவில்லை என்ற தகவல் கிடைத்தது. இதனையடுத்து தனிப்படை போலீசார் கண்ணன் வீட்டிற்கு சென்று விசாரித்தனர். அப்போது தனது மனைவி மஞ்சுளா சென்னையில் உள்ள தனது மகளை பார்க்க சென்றார். மகளை பார்த்துவிட்டு சென்னையில் இருந்து புறப்பட்டவர் 2 நாட்களாக வீடு திரும்பவில்லை எனக் கூறியுள்ளார். மஞ்சுளா குறித்து போலீசார் விசாரிக்கையில், மஞ்சுளா துணி வியாபாரம் செய்து வந்தார். இருசக்கர வாகனத்தில் துணிகளை எடுத்துக்கொண்டு வீடு வீடாக சென்று விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
மஞ்சுளாவை கொலை செய்தது யார்?
கண்ணுத்தோப்பு பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் புகைப்படத்தை போலீசார் கண்ணனிடம் காண்பித்தனர். அவர் இறந்தது தனது மனைவி தான் என்பதை உறுதிசெய்தார். போலீசார் விசாரணைக்கு வந்த பின்னர் இறந்தது மஞ்சுளா என்பது அவரது குடும்பத்தினருக்கு தெரியவந்தது. இறந்தது யார் என்ற கேள்வி மஞ்சுளா என்ற விடை கிடைத்தது. மஞ்சுளாவை கொலை செய்தது யார்? அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்ற அடுக்கடுக்கான கேள்விகள் எழுந்தது. போலீசார் மஞ்சுளாவின் செல்போன் எண்ணை கேட்டு பெற்றனர். அவருக்கு கடைசியாக யார் போன் செய்தனர். அவர் யார்? யாரிடம் பேசியுள்ளார் என ஆராயந்தனர். அதில் எதாவது துப்பு கிடைக்குமா? என்று விசாரிக்கையில் அவருக்கும் ஒரு செல்போன் எண்ணில் இருந்து தினமும் போன் வந்தது. மஞ்சுளா நீண்ட நேரம் பேசி வந்தது தெரியவந்தது. ஆனால் கடந்த 2 நாட்களாக அந்த எண்ணில் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை என்பதால் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.
போலீசாருக்கு மீன் வறுவல்
அந்த எண் யாருடையது என போலீசார் விசாரிக்கையில் அது நெய்வேலி பகுதியை சேர்ந்த மீன் வியாபாரி சம்பத் என்பவருடைய செல்போன் எண் என்பது தெரியவந்தது. சம்பத் நெய்வேலி ஆர்ச் கேட் அருகில் மீன் வறுவல் வியாபாரம் செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்தனர். சம்பத் வழக்கம் போல் மீன் வறுத்து கொடுத்துக்கொண்டிருந்தார். தனிப்படை போலீசார் சம்பத்திடம் மீன் வறுவல் கேட்டனர். அவரும் மீன் வறுவல் போட்டு கொடுத்தார். கொஞ்சம் பேச வேண்டும் எனக்கூறி சம்பத்தை போலீசார் தங்களது வாகனத்தில் ஏற்றினர். அவரிடம் மஞ்சுளா குறித்து விசாரித்தனர். ஆனால் அவர் மஞ்சுளா குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனக் கூறியுள்ளார். சம்பத்தின் செல்போனை வாங்கிய போலீசார் அதனை ஆய்வு செய்ததில் சம்பத் தினமும் மஞ்சுளாவுக்கு போன் செய்து பேசியதும் கடந்த 2 நாட்களாக போன் செய்யாதது தெரியவந்தது.
: தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமை கொலை சம்பவம் - தவெக அரசை விமர்சிக்கும் பிரேமலதா
ஏன் 2 நாளாக மஞ்சுளாவுக்கு போன் செய்யவில்லை எனக் கேட்டுள்ளனர். மஞ்சுளாவை நீதானே கொலை செய்தாய் என கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது மஞ்சுளாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். சம்பத் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், " எனக்கும் மஞ்சுளாவுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் நட்பாக பேசிப்பழகி வந்த நிலையில் அந்தப் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தோம். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள தனது மகளை பார்க்க மஞ்சுளா சென்றார். பின்னர் அவர் அங்கிருந்து வடலூருக்கு பேருந்தில் திரும்பிக்கொண்டிருந்தார்.
மீன் வெட்டும் கத்தியால்..
மஞ்சுளாவுக்கு போன் செய்து கோலியனூர் கூட்டுரோட்டில் இறங்குமாறு கூறி இருக்கிறார். கோலியனூர் கூட்டுரோட்டில் மஞ்சுளாவுக்காக காத்திருந்தேன். நான் சொன்னபடி கூட்டுரோட்டில் வந்திறங்கினர். அவரை எனது பைக்கில் அழைத்துக்கொண்டு கண்ணுதோப்பு பாலம் பகுதிக்கு வந்தேன். அதிகாலை 3 மணி இருக்கும். அப்போது அவரை உல்லாசத்துக்கு அழைத்தேன் ஆனால் மஞ்சுளா மறுத்துவிட்டார். இதனால் எனக்கு ஆத்திரம் வந்தது. மேலும் தன்னை திருமணம் செய்துக்கொள்ளுமாறு கட்டாயப்படுத்தினார். இதனால் எங்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரத்தில் மீன் வெட்ட வைத்திருந்த கத்தியை எடுத்து மஞ்சுளாவை கழுத்தறுக்கொலை செய்தேன்.
அந்த பகுதியில் இருந்த மண்ணை கொண்டு அவரது உடலை மறைத்தேன். பின்னர் கொலை செய்ய பயன்படுத்திய கத்தியை முட்புதரில் வீசிவிட்டு மஞ்சுளாவின் செல்போனை எடுத்து சென்று கடலூர் வெள்ளிக்கடற்கரையில் இருந்த முட்புதரில் வீசியதாக கூறினார. சம்பத்தை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

