Vande Bharat : ரயில் பயணம் மற்றும் அனுபவங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும்! இது எப்பொழுதுமே மகிழ்ச்சியானதாகவும் நினைவில் வைத்துக்கொள்ள கூடிய அளவுக்கு அழகான அனுபவமாகவும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் மைசூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னையிலிருந்து பெங்களூரு சென்ற ஒரு இளைஞர் தனக்கு நேர்ந்த மோசமான அனுபவம் பற்றி எக்சலத்தில் பதிவிட்டு அது தற்போது வைரலாகி வருகிறது. இது தனக்கு நேர்ந்த மிக மோசமான அனுபவம் என்றும் நிம்மதியாகவே பயணம் செய்ய முடியவில்லை மற்றும் உணவு நன்றாக இல்லை என்று தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார்.
Instagram Influencer: பிரபல இன்ஸ்டா இன்ஃப்ளூயன்சர் ஐஸ்வர்யா - கிரிஷ் ஜோடி மீது சைபர் கிரைமில் வழக்குப்பதிவு!
என்னுடைய மோசமான ரயில் பயண அனுபவம் - பயணியின் வைரல் பதிவு - Train Travel Experience Viral Post
மே 29ஆம் தேதி X தளத்தில் 'மோசமான ரயில் பயணம்' என்று அஜய் குமார் என்ற இளைஞர் வந்தே பாரத் ரயிலில் நடந்த நிகழ்வை விவரித்துள்ளார். சென்னையிலிருந்து பெங்களூரு சென்ற அந்த இளைஞர், குழந்தை செய்யும் தவறை பெற்றோர்கள் கொஞ்சம் கூட கண்டு கொள்ளாமல் இருந்தார்கள் என்று பதிவிட்டு இருக்கிறார்.
அது மட்டும் இல்லாமல் புஷ்பேக் சீட் என்பதால் அந்த இருக்கையை முன்னும் பின்னும் தள்ளிக்கொண்டு அந்த குழந்தை அது ஒரு விளையாட்டு போல விளையாடிக் கொண்டிருந்தது. பயணத்தின் பொழுது என்னால் லேப்டாப்பில் வேலை செய்ய முடியவில்லை. பல நேரங்களில் இவ்வாறு அந்த குழந்தை சீட்டை இழுத்துக் கொண்டு இருந்தது எனது முட்டியில் பலமுறை இடித்தது. இதையெல்லாம் பார்த்துக்கொண்டு அந்த குழந்தையின் அப்பா மட்டும் இல்லை அம்மாவும் அமைதியாக தான் இருந்தார் என்று அஜய் தெரிவித்திருந்தார்.
Vande Bharat Journey: ரயில் பயணம் குழந்தைகளுக்கு ஒரு புதிய மற்றும் உற்சாகமான அனுபவமாக இருக்கும் என்பதில் சந்தேகமே கிடையாது. ஆனால் இது போல பிறருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் குழந்தைகள் நடக்கும் பொழுது அது பிறருக்கு எவ்வளவு தொந்தரவாக இருக்கிறது என்பதை பெற்றோர் உணர்ந்து, அவர்களை தடுக்க வேண்டும். பொறுப்பற்ற வளர்ப்பு, பொறுப்பே இல்லாத பெற்றோராக இருக்கிறார் என்று அவரது பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.
இது மட்டுமில்லாமல் தனக்கு வழங்கப்பட்ட உணவு நன்றாக இல்லை ஒட்டுமொத்தமாக இந்த ரயில் அனுபவம் மோசமானதாக இருந்தது என்றும் பதிவிட்டிருந்தார்.
How to say NO: மனசு சந்தோஷமா இருக்க... 'No' சொல்லி பழகுங்க, லைஃப் நல்லா இருக்கும்!
இந்த பதிவுக்கு ஆதரவாக பலரும் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
இந்திய பெற்றோர்களை பொறுத்தவரை தங்கள் குழந்தைகள் பிறரை தொந்தரவு செய்வது என்பதை அவர்கள் கண்டுகொள்ளவே மாட்டார்கள் என்பது பலரின் ஒட்டுமொத்த கருத்தாகவே இருக்கிறது. இந்த கண்ணோட்டத்தில் பார்க்கும் பொழுது இது பெற்றோர் தங்கள் குழந்தைகள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற ஒரு உணர்வை குழந்தைகளுக்கு தாங்கள் அறியாமலேயே கற்றுக் கொடுக்கிறார்கள். தங்கள் செய்வது தவறு என்பது குழந்தைகளுக்கு புரியவே புரியாது.

