Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஆடிப்பெருக்கு: காவிரித் தாய்க்கு நன்றி செலுத்தும் திருநாள்..!

ஆடிப்பெருக்கு: காவிரித் தாய்க்கு நன்றி செலுத்தும் திருநாள்..!

TV9 Tamil 1 week ago
டி மாதம் 18-ஆம் நாள் கொண்டாடப்படும் ஆடிப்பெருக்கு, இயற்கை அளித்த கொடையான நீரின் வளம் மற்றும் உயிர்ப்பண்பைப் போற்றும் தமிழ் கலாச்சாரத்தின் பழமையான விழாவாகும்.
தென்மேற்கு பருவமழையினால் காவிரியிலும் பிற நதிகளிலும் புதுவெள்ளம் பெருக்கெடுத்து வரும் இந்த நாளைத் தமிழர்கள் சங்க காலம் முதலே 'பதினெட்டாம் பெருக்கு' என விமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர். காவிரி தாயை தெய்வமாக நினைத்து நன்றி செலுத்தும் விதமாகவும், நிலமும் நீரும் வளமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடும் இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

நதி மற்றும் இயற்கை வழிபாடு

ஆடிப்பெருக்கு நாளன்று காலையிலேயே புனித நீராடி, ஆறுகள், குளம் அல்லது ஏரிக்கரைகளில் வழிபடும் இடத்தை சுத்தம் செய்து பசு சாணத்தால் மெழுகி வாழை இலை விரிக்க வேண்டும். நீர்நிலைகளில் காவேரி அம்மனை நினைத்து மலர்கள், மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு மற்றும் பழங்கள் வைத்து தீபாராதனை காட்டி வழிபட வேண்டும். பூஜித்த வாழை மட்டைகளில் அகல்விளக்குகள் ஏற்றி, ஓடும் நீரில் மிதக்க விட்டு நீர் ஆதாரங்களுக்கு மனதார நன்றி தெரிவிக்க வேண்டும். நீர்நிலைகளுக்குச் செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே ஒரு செம்பில் தூய நீர் நிரப்பி, அதில் மஞ்சள் மற்றும் பூக்கள் சேர்த்து கங்கை, காவிரியை மனதில் நினைத்து வழிபடலாம்.

வழிபாட்டிற்குச் செய்ய வேண்டிய உணவுகளும் படையலும்

ஆடிப்பெருக்கு திருநாளில் இயற்கைக்கும் இறைவனுக்கும் நன்றி செலுத்தும் வகையில் பல்வேறு வகையான கலவை சாதங்கள் தயாரித்து படையலிடுவது வழக்கமாகும். தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம், புளியோதரை, சர்க்கரைப் பொங்கல் மற்றும் தயிர் சாதம் போன்ற சித்ரான்னங்களைச் செய்து இறைவனுக்குப் படைக்க வேண்டும். இவற்றுடன் காதோலை கருகமணி, மஞ்சள் கயிறு, காப்பரிசி மற்றும் பழங்களை வைத்து பக்தி சிரத்தையுடன் பூஜை செய்ய வேண்டும். படையலிட்ட பிரசாதங்களை உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொடுத்து தானம் செய்வதும் நன்மைகளைத் தரும். : திருச்செந்தூர் முருகன் கோயில் தரிசன நேரத்தில் மாற்றமா? உண்மை இதோ!

சுமங்கலிகள் மற்றும் பெண்களுக்கான சிறப்புச் சடங்குகள்

சுமங்கலிப் பெண்கள் தங்கள் மாங்கல்ய பலம் பெறவும் கணவனின் ஆயுள் பெருகவும் காவேரி அம்மனை வேண்டி மஞ்சள் கயிற்றை மாற்றிக் கொள்வார்கள். திருமணமான பெண்கள் காதோலை, கருகமணி, மஞ்சள் மற்றும் பூக்களை ஆற்றில் விட்டு வழிபாடு செய்து புதிய மஞ்சள் நூலை கழுத்தில் அணிந்து கொள்வர். திருமணமாகாத இளம் பெண்கள் நல்ல வாழ்க்கைத் துணை அமையவும் மனம்போல வாழ்க்கை அமையவும் வேண்டி ஆற்றங்கரையில் சிறப்பு வழிபாடு செய்வார்கள். இந்த நாளில் பெண்களுக்கு மஞ்சள், வளையல் மற்றும் மங்களப் பொருட்களை பரிசளிப்பது குடும்பத்தில் மங்களகரமான சூழ்நிலையை உருவாக்கும்.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil