தமிழகத்தில் பத்திரப்பதிவை முழுவதுமாக ஆன்லைன் மயமாக்குவதற்கான பணிகள் திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் இருந்தே நடைபெற்று வருகிறது.
வரிசை முறைக்கான டோக்கன்களை பெற வேண்டிய அவசியம் இல்லை
தமிழகத்தில் சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே வீடு, மனை உள்ளிட்டவற்றை பத்திரப்பவிது செய்யும் பணிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக வரிசை முறைக்கான டோக்கன் பெற வேண்டும் என்ற தேவை இல்லாத சூழல் உருவாகியுள்ளது. இதனை பத்திரப்பதிவுத்துறை அறிவித்துள்ளது. மேலும், இந்த பணிகளை 5 கட்டங்களாக பிரித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இனி ரூ.25 லட்சம் வரை மருத்துவ செலவுகள் இலவசம்.. முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் அளவு உயர்வு!ஸ்டார் 3.0 மென்பொருள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது
தமிழகத்தில் பத்திரப்பதிவுத்துறை ஸ்டார் 3.0 மென்பொருளை அறிமுகம் செய்துள்ளது. இந்த அம்சத்தின் மூலம் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், மனைப்பிரிவுகள், வீட்டு மனை உள்ளிட்ட பத்திரங்களை சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு செல்லாமலே வீட்டில் இருந்தபடியே பதிவு செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் புதிய வீட்டு மனை விற்பனை பத்திரங்கள், எம்.ஓ.டி எனப்படும் வீட்டு கடனுக்கான ஆவணம் ஒப்படைப்பு, அடமான பத்திரம், கடன் முடிவுக்கான ரசீது ஆவணம் ஆகியவற்றை சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு செல்லாமலே பதிவு செய்ய முடியும்.
