தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஸ்ரீ லீலா. இவர் தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த நிலையில் தற்போது தமிழ் சினிமாவில் பராசக்தி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆகியுள்ளார்.
பராசக்தி படத்திற்காக மிகவும் மெனக்கெட்டார் ஸ்ரீலீலா:
இந்த நிலையில் இயக்குநர் சுதா கொங்கரா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசியதாவது, ஸ்ரீலீலா தமிழை ஆழமாகக் கற்று, ஒவ்வொரு வார்த்தையின் அர்த்தத்தையும் புரிந்துகொண்டார். அவர் உண்மையிலேயே நடனத்தின் ராணி. அதிக ஒப்பனை இல்லாமல், இவ்வளவு இயல்பான அழகை திரையில் பார்த்து நீண்ட காலமாகிவிட்டது, மேலும் ஸ்ரீலீலா வைஜெயந்திமாலாவை நினைவுபடுத்துகிறார். 'பராசக்தி' படப்பிடிப்பின் போது, அவர் தனது இறுதி மருத்துவத் தேர்வுகளை எழுதிக் கொண்டிருந்தார். அவர் காலையில் தேர்வுகளை முடித்துவிட்டு, மதியத்திற்குள் நேராக படப்பிடிப்புத் தளத்திற்கு வந்துவிட்டார். நான் அவருடைய கண்களில் ஒரு தீப்பொறியைக் கண்டேன், அந்த கணமே, இந்தப் படத்தில் ரத்னமாலா கதாபாத்திரத்திற்கு அவர்தான் சரியானவர் என்று நான் முடிவு செய்தேன் என்று தெரிவித்துள்ளார். ... கானா வினோத்தை காணவந்த அவரின் குடும்பம்.. கண்ணீருடன் கதறிய வினோத் - வைரலாகும் புரோமோ!இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:

