தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் மாதா கோவில் தெருவில் உள்ள திருமண மண்டபத்தில் அதே ஊரை சேர்ந்த இருவருக்கு திருமணம் நடைபெற்றது.
மர்ம கும்பலை சேர்ந்த 4 பேர் கைது
அப்போது. ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த கும்பலை விரட்டி பிடித்து 4 பேரை கைது செய்தனர். மேலும், தப்பி ஓடிய நபர்களை தேடி வருகின்றனர். அரிவாள் வெட்டில் காயம் அடைந்த 8 பேரும் ஆலங்குளம் மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அசோக் குமார், ஆலங்குளம் துணை காவல் கண்காணிப்பாளர் கிளாட்சன் ஜோஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். திருச்செந்தூர் முருகன் கோவிலில் அமைச்சரிடம் ரூ.4 ஆயிரம் கையூட்டு பெற்ற அர்ச்சகர்.. வசமாக சிக்கியது எப்படி!சம்பவ இடத்தில் இரு மாவட்ட எஸ்பிக்கள் விசாரணை
அப்போது, கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்யக்கோரி அந்த கிராம மக்கள் திடீரென ஆலங்குளம்- ரெட்டியார்பட்டி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம், எஸ் பி அசோக்குமார் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைய செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், குற்றவாளிகளை உடனே கைது செய்யுமாறு தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி நெல்லை சரக டிஐஜி மற்றும் திருநெல்வேலி, தென்காசி மாவட்ட எஸ்.பி.க்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.குற்றவாளிகளை சுட்டு பிடிக்க உத்தரவு?
இந்த கும்பலை கைது செய்வதற்காக நெல்லை எஸ். பி. பிரசண்ண குமார் மேற்பார்வையில் 2 தனிப்படைகள் மற்றும் தென்காசி எஸ். பி. அசோக்குமார் தலைமையில் 4 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. குற்றவாளிகளை பிடிக்கும் போது போலீசார் மீது எதிர் தாக்குதல் நடத்த முற்பட்டால் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கவும் ரகசியமாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அமைச்சரிடம் தரிசனத்துக்கு லஞ்சம்: இருவர் பணி நீக்கம் - அர்ச்சகர் உள்பட இருவர் பணியிடை நீக்கம்!
