இரத்தத்தில் உள்ள நச்சுக்களை அகற்றுவது, உடலில் நீர் சமநிலையைப் பேணுவது மற்றும் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது ஆகியவை சிறுநீரகங்களின் பணிகளாகும்.
சிறுநீரகங்கள் சரியாகச் செயல்படாவிட்டால், தீங்கு விளைவிக்கும் பொருட்கள் உடலில் தேங்கி, குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பாதிக்கின்றன.

குழந்தைகளுக்கு ஏற்படும் சிறுநீரக நோயானது பிறவியிலேயே இருக்கலாம் அல்லது நோய்த்தொற்றால் ஏற்படலாம். நெஃப்ரோடிக் சிண்ட்ரோம், சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்று (UTI), குளோமெருலோநெஃப்ரிடிஸ் (சிறுநீரகங்களின் அழற்சி), அத்துடன் பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் அல்லது சிறுநீரகங்களின் அமைப்பில் உள்ள குறைபாடுகள் ஆகியவை சில பொதுவான பிரச்சனைகளாகும்.

பெற்றோர்கள் சரியாக கவனிக்காவிட்டால், குழந்தைகளின் சிறுநீரகங்கள் முற்றிலும் செயல்படுவதை நிறுத்திவிடும். இது இறுதி நிலை சிறுநீரக நோய் என்று அழைக்கப்படுகிறது. எனவே, அதன் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறிவது மிகவும் முக்கியம்.

குழந்தைகளுக்கு கண்கள், பாதங்கள் அல்லது கணுக்கால்களைச் சுற்றியுள்ள வீக்கம், சிறுநீர் கழித்தல் குறைதல், அடர் நிற சிறுநீர், சிறுநீரில் இரத்தம், அல்லது அடிக்கடி சிறுநீர் கழித்தல், வெளிப்படையான காரணமின்றி தொடரும் காய்ச்சல், பசியின்மை மற்றும் வளர்ச்சிக் குறைபாடு, தொடர்ச்சியான சோர்வு அல்லது பலவீனம், உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றில் இவற்றில் ஏதேனும் தென்பட்டால் மருத்துவரிடம் அழைத்து செல்வது மிக மிக முக்கியம்.

குழந்தைகளின் சிறுநீரகங்கள் சரியாக செயல்பட உங்கள் உணவில் உப்பின் அளவைக் கட்டுப்படுத்துதல், உங்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி புரதத்தை உட்கொள்ளுதல், பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வதைத் தவிர்த்தல், நிறைய தண்ணீர் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும். எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் காணப்படும் சிறிய அறிகுறிகளைக் கூட புறக்கணிக்காமல், சரியான நேரத்தில் நிபுணர் ஆலோசனையைப் பெற வேண்டும்.

