தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் என தென்னிந்திய சினிமாவில் பிரபல கதாநாயகியாக இருந்துவருபவர் நடிகை நயன்தாரா (Nayanthara).
ஹாய் திரைப்படத்தின் கதை குறித்து இயக்குநர் விஷ்ணு இடவன் சொன்ன விஷயம் :
அந்த பத்திரிகை பேட்டியில் விஷ்ணு இடவன், "எல்லா ஆண்களும் ஷாலினி போன்ற ஒரு பெண்ணை விரும்பலாம். ஆனால் அதற்கு, அவர்கள் அஜித்குமார் போல இருக்க வேண்டும் இதுதான் படத்தின் மைய கதை. இப்படத்தின் கதை ஒரு நிறுவனத்தில் நல்ல பதவியில் பணிபுரியும் ஹீரோ திருமணம் செய்துகொள்ள முடிவு செய்வதைப் பற்றியும், அவன் தனக்கு மனைவியாக எப்படிப்பட்ட பெண் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கிறான். மேலும் அந்த பெண்ணை தகுதியானவனாக தன்னை எப்படித் தயார்படுத்திக் கொள்கிறான் என்பதைச் சுற்றியே இந்தப் படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது என அகில் அவர் தெரிவித்துள்ளார். அரசன் படம் சூப்பராக வந்துருக்கு - அப்டேட் கொடுத்த இயக்குநர் துரை செந்தில்குமார்!ஹாய் படம் பற்ற இயக்குநர் விஷ்ணு இடவன் சொன்னது குறித்து வைரலாகும் பதிவு:
இந்த ஹாய் திரைப்படமானது மிகவும் வித்தியாசமான காதல் கதைக்களத்தில் அமைந்துள்ளது. இதில் நயன்தாரா, கவின், ராதிகா சரத்குமார், பிரபு, பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் குரேஷி போன்ற பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த் படத்தை வரும் 2026 ஏப்ரல் இறுதி அல்லது மே மாதத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

