திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலின் 14 கிலோமீட்டர் கிரிவலப் பாதையில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற வழிபாட்டுத் தலங்களில் ஒன்று இடுக்கு பிள்ளையார் கோயிலாகும்.
தொடர் அசம்பாவிதங்களும் நிலவிய பதற்றமும்
அண்மையில் நடந்த இரு சம்பவங்கள் பக்தர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தின. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவர் பாறை இடுக்கைக் கடந்து வந்த பின், திடீரென ஏற்பட்ட மூச்சுத்திணறலால் மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து, பெண் பக்தர் ஒருவர் அதே குறுகலான துவாரத்தில் சிக்கிக் கொள்ளவே, அருகிலிருந்தவர்கள் அவரை மீட்கும் காணொளி இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.கோயில் நிர்வாகத்தின் புதிய கட்டுப்பாடுகள்
இச்சம்பவங்களைத் தொடர்ந்து பக்தர்களின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்ய அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் உடனடியாக அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன்படி உடல் பருமன் அதிகம் உள்ளவர்கள், முதியவர்கள், இதய நோய், மூச்சுத்திணறல் மற்றும் சுவாசக் கோளாறு உள்ளவர்கள் இனி இந்த பாறை இடுக்கின் வழியே செல்ல அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த எச்சரிக்கைப் பலகைகள் தமிழ், ஆங்கிலம் மற்றும் தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் அங்கு வைக்கப்பட்டுள்ளன.பாதுகாப்புச் சோதனையும் தரிசன நேரமும்
ஆபத்தான சூழல்களைத் தவிர்க்கும் வகையில், நுழைவாயிலில் இரும்புக் கம்பிகளால் ஆன சோதனைக் கட்டமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. அதில் எளிதாகக் கடந்து செல்லக்கூடிய பக்தர்கள் மட்டுமே தொடர்ந்து செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், பௌர்ணமி நாட்களைத் தவிர்த்து மற்ற நாட்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே இடுக்கு பிள்ளையார் கோயிலில் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும் என கோயில் இணை ஆணையர் பரணிதரன் தெரிவித்துள்ளார். : ஆடி வெள்ளி: வீட்டில் லட்சுமி கடாட்சமும் செல்வமும் பெருக சுமங்கலி பூஜை செய்வது எப்படி? பொறுப்புத் துறப்பு: இத்தளத்தில் உள்ள லைப்ஸ்டைல், ஆரோக்கியம் மற்றும் உணவு சார்ந்த தகவல்கள் பொதுவான விழிப்புணர்விற்காக மட்டுமே; இவை மருத்துவ ஆலோசனையல்ல. இதில் உள்ள குறிப்புகளைப் பின்பற்றும் முன் தகுந்த நிபுணர் அல்லது மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.
