சேலம் மாவட்டம் மேச்சேரி அருகேயுள்ள எம்.காளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்தி. ஐடிஐ படித்துவிட்டுத் தன் எதிர்காலக் கனவுகளோடு உழைத்து வந்த இவருடைய வாழ்க்கை, கடந்த 2024ஆம் ஆண்டு தலைகீழாக மாறியது.
திருப்புமுனையை ஏற்படுத்திய டிஎன்ஏ சோதனை
இந்த வழக்கு சேலம் போக்சோ நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதற்கிடையில், பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட அந்தச் சிறுமிக்குக் குழந்தை பிறந்தது. வழக்கின் உண்மைத்தன்மையைக் கண்டறிய, நீதிமன்ற உத்தரவின்படி சிறுமி, குழந்தை மற்றும் குற்றம் சாட்டப்பட்ட கார்த்தி ஆகிய மூன்று பேருக்கும் மரபணு (DNA) சோதனை நடத்தப்பட்டது. அறிவியல் ஒருபோதும் பொய் சொல்லாது என்பதற்கு இணங்க, அந்த டிஎன்ஏ சோதனையின் முடிவுகள் வந்தன. சோதனையில், சிறுமிக்குப் பிறந்த குழந்தைக்குக் கார்த்தி தந்தை இல்லை என்பது 100 சதவிகிதம் உறுதியானது. அதாவது, கார்த்திக்கும் இந்த விவகாரத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்ற உண்மை வெட்டவெளிச்சமானது. அந்த சிறுமி வேறொரு நபரை காப்பாற்றுவதற்காக கார்த்தி மீது பழி போட்டது தெரிய வந்தது.நீதிபதி வழங்கிய அதிரடி தீர்ப்பு
இந்த வழக்கு நேற்று மீண்டும் சேலம் போக்சோ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. டிஎன்ஏ சோதனை அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதி மீனாட்சி, கார்த்தி மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால், அவரை அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் முழுமையாக விடுதலை செய்து அதிரடி உத்தரவிட்டார். விடுதலையான கார்த்தியின் உருக்கமான பேட்டி, நீதிமன்றத்தால் குற்றமற்றவர் என அறிவிக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சிறையிலிருந்து கம்பீரமாக வெளியே வந்த கார்த்தி கண்கலங்கியபடி பேசுகையில், "நான் எந்தத் தவறும் செய்யவில்லை என்பது என் மனசாட்சிக்குத் தெரியும். கெட்ட பெயரோடு ஊருக்குள் போய் தலைகுனிந்து நிற்பதை விட, நான் குற்றமற்றவன் என்பதை சட்டப்பூர்வமாக நிரூபித்துவிட்டுத்தான் மறுபடி என் மண்ணை மிதிப்பேன் என்று உறுதியாக இருந்தேன். அதனால்தான் ஜாமீன் கூடக் கேட்காமல் இரண்டு வருடம் சிறையிலேயே இருந்தேன். போலீசாரிடம் ஆரம்பத்திலேயே நான் கெஞ்சினேன், அவர்கள் கேட்கவில்லை. இன்று உண்மை ஜெயித்துவிட்டது, என் சபதத்தை முடித்துவிட்டு இப்போது நிம்மதியாக என் ஊருக்குச் செல்கிறேன்" என்றார் சிந்திக்க வேண்டிய கேள்வி, அறிவியல் பூர்வமாக கார்த்தி நிரபராதி என்று நிரூபிக்கப்பட்டுவிட்டாலும், செய்யாத குற்றத்திற்காக ஒரு வாலிபர் தனது வாழ்வின் விலைமதிப்பற்ற இரண்டு ஆண்டுகளைச் சிறைக்குள் கழித்திருப்பதும், அவர் சந்தித்த மன உளைச்சலும் எவராலும் ஈடு செய்ய முடியாத ஒன்று. சட்டம் குற்றவாளிகளைத் தண்டிப்பதோடு மட்டுமில்லாமல், அவசர அவசரமாகப் போடப்படும் பொய் வழக்குகளில் இருந்து கார்த்தி போன்ற சாமானியர்களின் வாழ்வை ஆரம்பத்திலேயே பாதுகாக்க இன்னும் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
