கோலிவுட் சினிமாவில் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருபவர் இயக்குநர் நெல்சன் திலீப் குமார். இவரது இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா படம் முதல் ஜெயிலர் படங்கள் வரை அனைத்தும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
கிஸ் படத்தின் வெற்றி குறித்து நெகிழ்ச்சியாக பதிவிட்ட நெல்சன் திலீப் குமார்:
இந்த நிலையில் இயக்குநர் நெல்சன் திலீப் குமார் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பதிவிட்டுள்ளதாவது, கிஸ் படத்திற்கு அமோக வரவேற்பு மக்களிடம் கிடைப்பதாக அறிந்தேன். என் நண்பர்கள் குழு இந்த வெற்றியைக் கொண்டாடுவது மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் படத்தின் இயக்குநர் சதீஷ் மற்றும் படத்தின் ஹீரோ கவின் உட்பட படக்குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.இயக்குநர் நெல்சன் திலீப் குமார் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

