மலையாள சினிமாவில் கடந்த 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் லோகா சாப்டர் 1 சந்திரா.
இந்தப் படம் மலையாள சினிமாவில் ஒரு புது சாதனைப் படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. சூப்பர் ஹீரோ ஆக்ஷன் ட்ராமா பாணியில் உருவான இந்தப் படத்தில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் கதையின் நாயகியாக நடித்து இருந்தார். இவர்தான் இந்த பாகத்தின் சூப்பர் ஹீரோ என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் துல்கர் சல்மான் அவரது தயாரிப்பு நிறுவனமான வேஃபரர் ஃபிலிம்ஸ் சார்பாக இந்தப் படத்தை தயாரித்து இருந்தார். வெறும் ரூபாய் 30 கோடிகள் பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் உலக அளவில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது மட்டும் இன்றி ரூபாய் 300 கோடிகள் வசூலித்து மலையாள சினிமாவில் இதுவரை இல்லாத ஒரு சாதனையைப் படைத்தது. இந்தப் படத்தில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் உடன் பலர் நடித்து இருந்தனர். மலையாள சினிமாவில் உள்ள பிரபலங்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படத்தின் முதல் பாகம் வரும் போதே அடுத்தடுத்து 5 பாகங்கள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இந்தப் படத்தில் தான் எப்படி நடிக்க ஒப்பந்தம் ஆனேன் என்பது குறித்து நடிகர் மம்முட்டி வெளிப்படையாக பேசிய இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
நான் ஒரு காட்டேரியாக நடிப்பதைப் பற்றி நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?
நான் ஒரு காட்டேரியாக நடிப்பதை பற்றி நீங்கள் எப்போதாவது நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா? இது ஒரு ஆச்சரியம்தான். உண்மையில், லோகா சாப்டர் 1 சந்திரா படத்தில், இல்லை என்ற ஒரு வார்த்தைக்கு மட்டும் குரல் கொடுக்குமாறுதான் என்னைக் கேட்டிருந்தார்கள். நான் செய்தது அது ஒன்று மட்டும்தான். படத்தில் அவர்கள் பயன்படுத்திய கை என்னுடையது அல்ல. படம் வெளியான பிறகுதான், அது என்னுடைய கைதான் என்று படக்குழுவினர் என்னிடம் கூறினார்கள். இப்போது அதில் நடிப்பது என்னுடைய பொறுப்பாகிவிட்டது. சொல்லப்போனால், அவர்கள் என்னை ஏமாற்றிவிட்டார்கள் என்று கலகலப்பாக மம்முட்டி பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.இணையத்தில் வைரலாகும் மம்முட்டியின் பேச்சு:

