Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
மனதை மாற்றும் 5 மந்திரங்கள்: 10 நிமிடங்களில் கவலைகளை விரட்டுங்கள்!

மனதை மாற்றும் 5 மந்திரங்கள்: 10 நிமிடங்களில் கவலைகளை விரட்டுங்கள்!

TV9 Tamil 1 hr ago
ம் மனதில் தோன்றும் தேவையற்ற குழப்பங்கள் தான் நம்முடைய உடல் ஆரோக்கியத்தை நேரடியாகக் கெடுக்கும் முக்கியக் காரணியாக அமைகிறது.
இதனைத் தவிர்க்க, மனபாரம் சூழும் நேரங்களில் இயற்கையான சூழலை ரசித்தபடி மனிதர்களைப் பார்த்தவாறு வேகமாக நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். அமைதியாக அமர்ந்து கண்களை மூடி, நுரையீரல் நிறைந்து வயிறு பெரிதாகுமளவிற்கு ஆழமாக மூச்சை இழுத்துவிட்டு, அந்த சுவாச ஓசையில் மட்டும் கவனத்தைச் செலுத்தலாம். நடனம் தெரியாவிட்டாலும், உற்சாகமான ஒரு குத்துப்பாட்டை ஒலிக்க விட்டு அதன் தாளத்திற்கு ஏற்ப உடலை அசைத்து மகிழ்ச்சியாக ஆடலாம்.

மனக்குழப்பமும் உடல்நல பாதிப்பும்

இன்றைய அவசர உலகத்தில் பெரும்பாலான மனிதர்களை வாட்டும் முக்கியப் பிரச்சினையாக மனக்குழப்பம் உருவெடுத்துள்ளது. நம் மனதில் எழும் தேவையற்ற சிந்தனைகளும், குழப்பங்களுமே நம்முடைய உடல் ஆரோக்கியத்தை நேரடியாகக் கெடுக்கும் முதன்மைக் காரணியாக விளங்குகின்றன என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மனம் அமைதியற்று இருக்கும்போது, அது உடலில் பல்வேறு அழுத்தங்களை ஏற்படுத்தி நோய்களுக்கு வழிவகுக்கிறது. எனவே, நம் மனதில் பெரிதாகக் குழப்பம் சூழும் போது கீழ்க்கண்ட ஐந்து விஷயங்களில் ஒன்றைச் செய்யுங்கள். பத்தே நிமிடங்களில் மனம் தெளிவாகி விடும் என்று வாழ்வியல் நிபுணர்கள் ஆலோசனை வழங்குகின்றனர்.

இயற்கை சூழலில் நடைப்பயிற்சி

மனம் பாரமாக இருக்கும் தருணங்களில், நான்கு சுவற்றுக்குள் முடங்கிவிடாமல் வெளிப்புறத்திற்கு வருவது நல்லது. இயற்கையான சூழலை ரசித்தபடி, சுற்றிலும் இருக்கும் மனிதர்களைப் பார்த்தபடி வேகமாக வாக்கிங் செய்யுங்கள். இவ்வாறு பசுமையான சூழலையும், மனிதர்களின் நடமாட்டத்தையும் கவனித்தபடி வேகமாக நடக்கும்போது, நம் மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் சீராகிறது. எதிர்மறை எண்ணங்கள் மறைந்து, வெறும் பத்து நிமிடங்களில் மனம் புத்துணர்ச்சி அடைவதை உங்களால் நேரடியாக உணர முடியும்.

ஆழ்ந்த சுவாசப் பயிற்சி

மனதைக் கட்டுப்படுத்தவும், தேவையற்ற சிந்தனைகளில் இருந்து திசைதிருப்பவும் சுவாசப் பயிற்சி ஒரு சிறந்த அருமருந்தாகும். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அமைதியான ஒரு இடத்தில் கண்களை மூடியபடி அமர்ந்து மூச்சை ஆழமாக இழுத்து விடுங்கள். இந்த நேரத்தில், உங்கள் நுரையீரல் நிறைகிறது மற்றும் வயிறு பெரிதாகிறது என்பதை உணருங்கள். நீங்கள் சுவாசிக்கும் ஓசை உங்களுக்கே பெரிதாகக் கேட்கிறது. இந்த விஷயங்களில் மனம் கவனம் செலுத்தட்டும். இவ்வாறு மூச்சின் மீது மட்டும் கவனத்தைக் குவிக்கும் போது, சிதறி ஓடும் மனம் சட்டென்று ஒருமுகப்பட்டு அமைதியடையும்.

உற்சாக நடனம்

இசைக்கும் நடனத்திற்கும் மன அழுத்தத்தைக் குறைக்கும் அசாத்திய சக்தி உண்டு. உங்களுக்கு நடனம் ஆடத் தெரியாது என்றாலும் பரவாயில்லை, உற்சாகம் தரும் குத்துப்பாட்டு ஒன்றை இசைக்க விட்டு அதன் தாளத்திற்கு ஏற்றபடி நடனம் ஆடுங்கள். முறையான நடனமாக இல்லாவிட்டாலும், உடலைத் தாளத்திற்கு ஏற்ப அசைத்து ஆடும்போது உடலில் தேங்கியுள்ள தேவையற்ற அழுத்தங்கள் அனைத்தும் வெளியேறி, மனம் லேசாக மாறும்.

நறுமண எண்ணெய் மசாஜ்

உடலின் நரம்புகளைத் தளர்த்துவதன் மூலம் மனதின் பாரத்தைக் குறைக்க முடியும். உடலுக்கும் மனதுக்கும் இதமளிக்கும் வாசனை நிறைந்த எண்ணையை எடுத்து கைகள்,கால்கள், கழுத்து, தோள்கள், என எல்லா இடங்களிலும் தடவி மசாஜ் செய்யுங்கள். இந்த நறுமண மசாஜ் நம் உடலில் உள்ள நரம்புகள் இறுக்கம் தந்து மனதையும் லேசாக்கும். நரம்புகளின் தளர்ச்சி ஒட்டுமொத்த உடலையும் நிம்மதியான நிலைக்குக் கொண்டு செல்லும்.

வாய்விட்ட சிரிப்பு

"வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும்" என்பது பழமொழி மட்டுமல்ல, அது அறிவியல் பூர்வமான உண்மையும் கூட. மனம் கவலையாக இருக்கும் போது, உங்களுக்குப் பிடித்த நகைச்சுவைக் காட்சிகளைப் பார்த்து வாய் விட்டு சிரியுங்கள். நீங்கள் மனமாறச் சிரிக்கும் போது, மூளையில் மகிழ்ச்சி ஹார்மோன்கள் சுரந்து மனதை சுத்தமாக்கும். இந்த எளிய ஐந்து பயிற்சிகளில் ஏதேனும் ஒன்றை உங்கள் அன்றாட வாழ்வில் பின்பற்றி, மனக்குழப்பங்களை நீக்கி, உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாத்திடுங்கள்.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil