தமிழ் சினிமாவில் மூன்றாவது தலைமுறையாக என்ட்ரி கொடுத்துள்ளவர் நடிகர் பவிஷ் (Actor Pavish). நடிகர் தனுஷின் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 21-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம். இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆனார் நடிகர் பவிஷ்.
நீக் பட நாயகனின் அடுத்தப் படம் பூஜையுடன் தொடங்கியது:
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை தொடர்ந்து அடுத்ததாக பவிஷ் எந்த இயக்குநர் படத்தில் நடிக்கிறார் என்பது குறித்து ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில் பவிஷ் நடிக்கும் இரண்டாவது படத்தின் பூஜை இன்று நடைப்பெற்றது. இந்தப் படத்தை இயக்குநர் மகேஷ் ராஜேந்திரன் இயக்க உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நாக துர்கா நாயகியாக நடிக்க உள்ளார். இந்த அறிவிப்பு தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. ... படையப்பா படத்தில் ஒரு காட்சிக்கு ரஜினியிடம் கெஞ்சி தான் நடிக்க வைத்தேன் - கே.எஸ்.ரவிக்குமார்!படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

