ராமநாதபுரம், செப்டம்பர் 4: இமானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி, குருபூஜை ஆகிய நிகழ்வுகள் காரணமாக ராமநாதபுரத்தில் அடுத்த இரண்டு மாதங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வருவதாக மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங்க் காலோன் தெரிவித்துள்ளார்.
இந்திய ராணுவத்தில் பணியாற்றி தலித் மக்களின் உரிமைகளுக்காக போராடிய தியாகி இமானுவேல் சேகரனின் நினைவு தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 11ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இவரது நினைவிடம் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அமைந்துள்ளது. அதேபோல் சுதந்திரப் போராட்டத் தியாகி, அரசியல்வாதி, ஆன்மீகவாதி என பல சிறப்புகளைக் கொண்ட பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பிறந்த தினம் மற்றும் நினைவு தினம் அக்டோபர் 30ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இவரது நினைவிடம் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசும்பொன்னில் அமைந்துள்ளது இந்த இரு நிகழ்வுகளுக்கும் தமிழ்நாடு முழுவதும் இருந்து இருவரின் சமூகம் சார்ந்த மக்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்வது வழக்கம்.
கடும் கட்டுப்பாடுகள் அமல்
இப்படியான நிலையில் இமானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் முத்துராமலிங்க தேவர் குருபூஜை ஆகிய நிகழ்வுகளுக்கு அஞ்சலி செலுத்த வருவோர் பின்பற்ற வேண்டிய 23 நிபந்தனைகளை ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி அஞ்சலி செலுத்த வருபவர்கள் தங்களது சொந்த வாகனங்களில் மட்டுமே வர வேண்டும். மேலும் பிற மாவட்டங்களில் இருந்து ராமநாதபுரம் வருபவர்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.இதையும் படிங்க: தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் UPI.. விரைவில் மாநிலம் முழுவதும் அமல்! மேலும் அனுமதிக்கப்பட்ட வழித்தடம் வழியாக மட்டுமே நினைவிடத்திற்கு வந்து செல்ல வேண்டும்.
அதே சமயம் வாகனத்தில் மேற்கூரையில் அமர்ந்து பயணம் செய்வது, ஆயுதங்கள் கொண்டு வருவது, பட்டாசு வெடிப்பது, ஒலிபெருக்கி பயன்படுத்துவது என அனைத்தும் தடை செய்யப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் வாகனங்களில் ஜாதி மற்றும் மத உணர்வுகளை தூண்டும் வாசகங்கள் கொண்ட பேனர்கள் இடம்பெறக்கூடாது. அது தொடர்பான முழக்கங்களை எழுப்பக் கூடாது. பேருந்துகளில் அழைத்துச் செல்லும்போது பயணிகள் படிக்கட்டிலும் மேற்கூறையிலும் பயணிக்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அரசியல் தலைவர்கள் வரும்போது அவர்களுடன் அதிகபட்சம் மூன்று சொந்த வாகனங்கள் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் வாகனத்தில் மேற்கூரையில் அமர்ந்து பயணம் செய்வது, ஆயுதங்கள் கொண்டு வருவது, பட்டாசு வெடிப்பது, ஒலிபெருக்கி பயன்படுத்துவது என அனைத்தும் தடை செய்யப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் வாகனங்களில் ஜாதி மற்றும் மத உணர்வுகளை தூண்டும் வாசகங்கள் கொண்ட பேனர்கள் இடம்பெறக்கூடாது. அது தொடர்பான முழக்கங்களை எழுப்பக் கூடாது. பேருந்துகளில் அழைத்துச் செல்லும்போது பயணிகள் படிக்கட்டிலும் மேற்கூறையிலும் பயணிக்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அரசியல் தலைவர்கள் வரும்போது அவர்களுடன் அதிகபட்சம் மூன்று சொந்த வாகனங்கள் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

